இலங்கையில் கனமழைக்கு ஐவர் பலி; இருவர் மாயம்

1 mins read
e13f9a03-a1a0-4ddb-9880-44d3b6187ba3
-

கொழும்பு: கன­மழை கார­ண­மாக இலங்­கை­யில் ஐந்து பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். மேலும் இரு­வ­ரைக் காண­வில்லை என அந்­நாட்­டின் பேரி­டர் மேலாண்மை முகமை தெரி­வித்­துள்­ளது.

அங்­குள்ள 25 மாவட்­டங்­களில் பாதிக்­கும் மேற்­பட்­டவை வெள்­ளத்­தால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் சில தினங்­க­ளுக்கு பலத்த மழை எதிர்­பார்க்­கப்­ப­டு­வதால் வெள்­ளப்­பெ­ருக்கு மேலும் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது. வரும் நாட்­களில் இந்த மழைப்­பொ­ழி­வானது நாட்­டின் வடக்கு கரை­யோ­ரப் பகு­தி­க­ளுக்கு நகர்ந்து செல்­லும் என்­றும் யாழ்ப்­பா­ணம் பகு­தி­களில் கன­மழை பெய்­யும் என்­றும் வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.