தீயில் நான்கு குழந்தைகள் பலி

1 mins read
ccd71a32-94aa-4b28-be49-bdad3dc8816b
குழந்தைகள் சிகிச்சை பிரிவில்தீ விபத்து ஏற்பட்டதால் நான்கு பச்சிளம் குழந்தைகள்மாண்டன. -

போபால்: இந்­தி­யா­வின் மத்­தி­யப் பிர­தேச மாநி­லத்­தில் உள்ள போபால் நகர மருத்­து­வ­ம­னை­யில் திடீர் தீ மூண்­ட­தில் நான்கு பச்­சி­ளம் குழந்தைகள் பலியாகின.

கமலா நேரு மருத்­து­வ­ம­னை­யின் குழந்­தை­கள் பிரி­வில் திங்­கள் ­கி­ழமை இரவு தீ விபத்து ஏற்­பட்­டது.

அங்கு வந்த தீய­ணைப்புப் படை­யி­னர் உட­ன­டி­யாக மீட்­புப் பணி­களில் ஈடு­பட்­ட­னர். இத­னால் 36 குழந்­தை­கள் காப்­பாற்­றப்­பட்­ட­தாக அதிகாரிகள் தெரி­வித்தனர்.

தீ விபத்­துக்­கான கார­ணம் தெரி­ய­வில்லை. மின் கசி­வி­னால் தீ மூண்­டி­ருக்­க­லாம் என்று நம்­பப்­ ப­டு­கிறது.

மத்­தி­யப் பிர­தேச மருத்­துவ கல்வி அமைச்­சர் விஸ்­வாஸ் சாரங் சம்­பவ இடத்தை நேரில் பார்­வை­யிட்­டார்.

இந்த நிலை­யில் மத்­தி­யப் பிர­தேச முதல்­வர் சிவ­ராஜ் சிங் சௌகான் தமது டுவிட்டர் பதிவில் போபா­லில் உள்ள கமலா நேரு மருத்­து­வ­ம­னை­யின் குழந்­தை­கள் வார்­டில் தீ விபத்து ஏற்­பட்ட சம்­ப­வம் மிக­வும் வருத்­தம் அ­ளிக்­கிறது என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்தச் சம்­ப­வம் குறித்து உயர்­மட்ட விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. பொதுச் சுகா­தா­ரம் மற்­றும் மருத்­து­வக் கல்வி உயர் அதி­காரி ஒரு­வர் சம்­ப­வத்தை விசா­ரிக்­க­வி­ருக்­கி­றார்.

"குழந்­தை­கள் உலகை விட்டு பிரிந்து சென்­றது தாங்க முடி­யாத வேத­னையை அளிக்­கிறது. குழந்­தை­க­ளின் ஆன்மா சாந்­தி­ய­டைய இறை­வனைப் பிரார்த்­திக்­கி­றேன்," என்­று முதல்­வர் மேலும் தெரி­வித்­துள்­ளார்.