லாரி மோதி தீப்பிடித்த பேருந்து; 12 பேர் உடல் கருகி மரணம்

லாரி மோதி தீப்பிடித்த பேருந்து; 12 பேர் உடல் கருகி மரணம்

1 mins read
cc7fe3d0-e1c4-4303-991f-f4566624ea9f
-

ஜோத்­பூர்: ராஜஸ்­தான் மாநி­லத்­தில் நேற்­றுக் காலை நிகழ்ந்த விபத்­தில் 12 பய­ணி­கள் உடல் கருகி மாண்­ட­னர். 22 பேர் காய­

ம­டைந்­த­னர். பார்­மெர் மாவட்­டத்­தி­லுள்ள பலோட்ரா நக­ரி­லி­ருந்து தனி­யார் பேருந்து ஒன்று சென்­று­கொண்­டி­ருந்­தது. பேருந்­தில் 30க்கும் மேற்­பட்ட பய­ணி­கள் இருந்­த­னர்.

பார்­மெர்-ஜோத்­பூர் நெடுஞ்­சா­லை­யில் பச்­பட்ரா என்ற பகு­தி­யில் பேருந்து சென்­று­கொண்­டி­ருந்­த­போது, எதிரே, டேங்­கர் லாரி ஒன்று வேக­மாக வந்­தது. இரண்­டும் கண்­ணி­மைக்­கும் நேரத்­தில் நேருக்கு நேர் பயங்­க­ர­மாக மோதின. மோதிய வேகத்­தில் பேருந்து தீப்­பி­டித்து எரி­யத் தொடங்­கி­யது.

இதில், பேருந்­தில் இருந்த 12 பேர் உயி­ரி­ழந்­த­தா­கக் கூறப்­ப­டு

­கிறது. 22 பேர் படு­கா­ய­ம­டைந்­த­னர். இது­பற்றி போலி­சா­ருக்­கும் தீய­ணைப்­புத் துறைக்­கும் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

விரைந்து வந்த அவர்­கள், தீயை அணைத்து கா­ய­ம­டைந்­த­வர்களை மீட்டு மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பி­னர். ராஜஸ்­தான் முதல்­வர் அசோக் கெலாட், மீட்பு, உட­னடி நிவா­ர­ணப் பணி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளார். விபத்­தி­லி­ருந்து தப்­பித்த பேருந்து பயணி ஒரு­வர் கூறும்­போது, டேங்­கர் லாரி வேக­மாக வந்­த­தால் விபத்து ஏற்­பட்டு பேருந்து தீப்­பி­டித்­தது என்­றார்.