ஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ள குல்கம் மாவட்டத்தில் சாவல்கம் என்ற பகுதியில் காஷ்மீர் போலிசும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது பயங்கரவாதிகள் போலிசார் மீது திடீரென தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. நீண்ட நேரம் நீடித்த இந்த மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீர் போலிசார் நேற்றுத் தெரிவித்தனர்.
காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 133 பயங்கரவாதிகள் பலியாகி உள்ளனர்.

