ரூ.300 கோடி போதைப்பொருள் சிக்கியது; மூன்று பேர் கைது

ரூ.300 கோடி போதைப்பொருள் சிக்கியது; மூன்று பேர் கைது

1 mins read
be16a2e1-906f-492a-8459-2f606e8aad31
-

துவா­ரகா: குஜ­ராத் மாநி­லத்­தின் துவா­ரகா மாவட்­டத்­தில் ரூ.300 கோடி போதைப்பொருள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. இதன் தொடர்­பில் மூன்று பேரைக் கைது செய்து போலிஸ் தீவிர விசா­ரணை நடத்து­கிறது.

குஜ­ராத் மாநி­லத்­துக்­கு கடல் வழி­யாக பெரு­ம­ளவு போதைப் பொருள் கடத்தி வரு­வது அண்­மை­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

குஜ­ராத் துறை­மு­கத்­தில் சில வாரங்­க­ளுக்கு முன்பு கோடிக்­கணக்­கான ரூபாய் மதிப்­புள்ள போதைப் பொருளை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர். இது­தொ­டர்­பாக பல்­வேறு மாநி­லங்­களில் சோதனை நடத்தி பலரையும் கைது செய்து அதி­கா­ரி­கள் தீவிரமாக விசா­ரித்து வரு­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில், ரூ.88.25 கோடி மதிப்­புள்ள போதைப்­பொ­ரு­ளு­டன் சஜ்­ஜத் கோஷி, 44, என்­ப­வர் சிக்­கி­னார். அதை­ய­டுத்து சலீம் யாகூப் கரா, அலி யாகூப் கரா என்ற சகோ­ த­ரர்­கள் கைதா­யி­னர்.

அவர்­க­ளி­டம் எஞ்­சிய போதைப் பொருட்­கள் பிடி­பட்­ட­தா­க­வும் விசா­ரணை நடப்­ப­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.