மணமான மகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை சலுகை

மணமான மகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை சலுகை

1 mins read
b275c622-008a-4276-b4e9-0f2f700af835
-

லக்னோ: உத்­த­ரப் பிர­தேச அர­சாங்­கம், அர­சாங்­கச் சேவை­யின்­போது உயிர்­நீத்­தோ­ரின் திரு­ம­ண­மான மகள்­க­ளுக்­குக் கருணை அடிப்­ப­டை­யில் வேலை பெற வகை­செய்­யும் ஒரு முடிவை எடுத்­துள்­ளது.

அதற்கு அந்த மாநில முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் தலை­மை­யி­லான அர­சாங்­கம் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. உத்­த­ரப் பிர­தே­சத்­தில் அடுத்த ஆண்டு சட்­ட­மன்­றத் தேர்­தல் நடக்க இருக்­கும் நிலை­யில் மாதர்­க­ளுக்கு ஆத­ர­வான இத்­த­கைய ஒரு முடிவை அர­சாங்­கம் எடுத்து உள்­ளது.

அர­சாங்­கச் சேவை­யின்­போது ஊழி­யர் மாண்­டு­விட்­டால் மாண்­ட­வ­ரின் மனைவி, திருமண­மான/திரு­ம­ண­மா­காத மகன் மற்­றும் திருமண­மா­காத மக­ளுக்கு மட்­டுமே இந்­தச் சலுகை இருந்­தது. இப்­போது திரு­ம­ண­மான மகளுக்கும் இந்­தச் சலுகை நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

அரசு சேவை­யில் மாண்­ட­வரின் தகுதி உள்ள குடும்ப உறுப்­பினர்­கள் அரசு வேலையை மறுத்­தால் மட்­டுமே அந்த வேலை­ திரு­மணமான மக­ளுக்குக் கிடைக்கும்.