கொழும்பு: இந்தியா-இலங்கை நாடாளுமன்றத் தோழமைச் சங்கத்திற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டு உள்ளதாக கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதர் கோபால் பாக்லே தெரிவித்தார்.
இந்த முடிவை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் பல துறைகளில் இரு தரப்பு நல்லுறவு வலுவடைய புதிய ஊக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தோழமைச் சங்கப் புத்துயிர் கூட்டத்தில் கோபால் பாக்லேவும் கலந்துகொண்டார்.
அந்தச் சங்கத்திற்கு அமைச்சர் சாமல் ராஜபக்சே தலைவர். சங்கம் முன்பு செயல்பட்டது. ஆனால் 2020 ஆகஸ்ட்டில் நடந்த தேர்தலுக்குப் பிறகு அமைந்த இப்போதைய நாடாளுமன்றத்தில் அது முதன்முதலாக புத்துயிர் பெற்றுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கள், துணை அமைச்சர்கள் உறுப்பினர்கள் உள்ளிட்ட 100 பேருக்கும் மேற்பட்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப் பட்டது.
தோழமைச் சங்கத்தில் இலங்கை சிறுபான்மை தரப்புகளின் தலைவர்களும் இடம்பெற்று இருப்பதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்தது.

