புதுடெல்லி: தெற்காசிய வட்டாரத்தில் இந்தியா மிக முக்கிய நாடு என்று வர்ணித்த தலிபான், இந்திய அரசுடன் நல்ல அரச தந்திர உறவை விரும்புவதாகக் கூறியது.
அதேவேளையில், எந்தவொரு நாட்டையும் தாக்குவதற்கான பூமியாக ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்த யாருக்கும் அனுமதி கிடைக்காது என்றும் தலிபான் தரப்பு தெரிவித்தது.
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து எட்டு நாடுகள் கலந்து கொண்ட பாதுகாப்புப் பேச்சுவார்த்தையை இந்தியா டெல்லியில் வியாழக்கிழமை நடத்தியது. அதையடுத்து தலிபான் இவ்வாறு தெரிவித்தது.

