திருப்பதியில் தொடர் மழை; கேரளாவில் நிலச்சரிவு

திருப்பதியில் தொடர் மழை; கேரளாவில் நிலச்சரிவு

1 mins read
0a9ebc56-2d64-4bc4-978e-1f487ec470a7
நெல்லூர் நகரில் பல வீடுகளிலும் மழை நீர் புகுந்துவிட்டது. படம்: இந்திய ஊடகம் -

திருப்­பதி: வட­கி­ழக்­குப் பரு­வ­மழை தொடர்ந்து பெய்து வரு­வ­தால் திருப்­ப­தி­யி­லும் நெல்­லூ­ரி­லும் பல சாலை­களில் வெள்­ளம் சூழ்ந்துவிட்­டது.

ஒரு சில இடங்­களில் மரங்­கள் முறிந்து விழுந்து­விட்­டன. பல இடங்­களில் வீடு­களில் நீர் புகுந்­து­விட்­ட­தா­கத் தெரியவந்தது. பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் பெரி­ய­ள­வில் மீட்­புப் பணி­கள் தொடங்கி இருக்­கின்­றன.

இந்­நி­லை­யில், கேர­ளா­வில் வட­கி­ழக்­குப் பரு­வ­மழை தீவி­ர­மடைந்தது. அடுத்த நான்கு நாட்­களுக்­குப் பலத்த மழை பெய்­யும் என்று அறி­விக்­கப்­பட்டுள்­ளது.

சப­ரி­மலை அருகே உள்ள எரி­மேலி, கீரித்­தோடு பகு­தி­களில் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. இரண்டு வீடு­கள் சேத­ம­டைந்­தன. இரண்டு ஆட்­டோக்­கள் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்­டன.

அதேபோல் கர்­நா­டக மாநிலத்­துக்­கும் மழை எச்­ச­ரிக்கை பிறப்­பிக்­கப்­பட்டு உள்­ளது. தொடர்மழை பெய்யும் என்பதால் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது.