மத்திய அரசுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு காங்கிரஸ் இழப்பீடு

மத்திய அரசுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு காங்கிரஸ் இழப்பீடு

2 mins read
2ebde149-b5c3-475b-9662-70269c22d083
-

டெல்லி: டெல்­லி­யில் குடி­ய­ர­சுத் தினத்­தன்று மத்­திய அர­சுக்கு எதி­ராக 'டிராக்­டர்' ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு இரண்டு லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்­கப்­படும் என்று பஞ்­சாப் மாநி­லத்­தின் காங்­கி­ரஸ் முதல்­வர் அறி­வித்­துள்­ளார்.

மத்­திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்­டங்­க­ளைத் திரும்­பப் பெறக் கோரி கடந்த ஆண்டு செப்­டம்­பர் முதல் டெல்­லி­யின் புற­ந­கர்ப் பகு­தி­களில் விவ­சா­யி­கள், வேளாண் அமைப்­பு­கள், விவ­சா­யி­கள் சங்­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள் தொடர்ந்து போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர்.

கடந்த ஜன­வரி 26ஆம் தேதி நடந்த குடி­ய­ரசு தின விழா­வின்­போது விவ­சா­யி­கள் டிராக்­ட­ரில் டெல்­லிக்­குள் ஊர்­வ­ல­மாக வர­வும் பேரணி நடத்­த­வும் டெல்லி போலி­சார் அனு­ம­தி­ வழங்கினர்.

ஆனால் அமை­தி­யாக தொடங்­கிய பேரணி, திடீ­ரென டெல்லி செங்­கோட்டை உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­களில் போலி­சா­ருக்­கும் விவ­சா­யி­க­ளுக்­கும் இடையே மோதல் ஏற்­பட்டு வன்­மு­றை­யாக மாறி­யது.

இதில் டெல்லி செங்­கோட்­டை­யில் நுழைந்த விவ­சா­யி­கள் அமைப்­பி­னர் தேசி­யக் கொடி ஏற்­றும் இடத்­தில் தங்­க­ளின் கொடியை ஏற்­றி­னர்.

விவ­சா­யி­கள் தரப்­பில் வேளாண் சட்­டங்­க­ளைத் திரும்­பப் பெறும்­வரை போராட்­டத்­தைக் கைவி­ட­மாட்­டோம் என்று உறுதி கூறப்பட்டது.

இந்த நிலை­யில் வேளாண் சட்டங்­க­ளுக்கு எதி­ரா­க­வும் விவ­சா­யி­க­ளுக்கு ஆத­ர­வா­க­வும் இருக்­கும் பஞ்­சாப் ஆளும் காங்­கி­ரஸ் அரசு வெள்­ளிக்கிழமை அறி­விப்பு ஒன்றை வெளி­யிட்­டது.

குடி­ய­ரசு தினத்­தன்று போராட்­டத்­தில் ஈடு­பட்டு கைது செய்­யப்­பட்ட 83 விவ­சா­யி­க­ளுக்கு இரண்டு லட்­சம் ரூபாய் இழப்­பீடு கொடுக்­கப்­படும் என அந்த அறி­விப்பு சொல்கிறது.

இதன் தொடர்பில் காங்­கி­ரஸ் ஆட்சி செய்­யும் பஞ்­சாப் மாநி­லத்­தின் முதல்­வர் சரண்­ஜித் சிங் சன்னி, டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், "வேளாண் சட்­டங்­க­ளுக்கு எதி­ரா­கப் போராடி வரும் விவ­சா­யி­களுக்கு ஆத­ர­வாக எனது அரசு இருக்­கிறது என்­பதை உறுதி செய்­கி­றேன். கடந்த ஜன­வரி 26ஆம் தேதி டெல்­லி­யில் நடந்த பேர­ணி­யில் போலி­சா­ரால் கைது செய்­யப்­பட்ட 83 விவ­சா­யி­க­ளுக்கு இழப்­பீ­டாக ரூ.2 லட்­சம் வழங்­கப்­படும்," என்று அவர் கூறியுள்ளார்.