தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமித் ஷா: போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கவேண்டும்

1 mins read
326af971-41ff-4635-b142-edb7e7d14dae
-

அம­ரா­வதி: போதைப்­பொ­ருள் பயன்­பாடு இளை­யர்­க­ளின் திற­னை­யும் வாழ்க்­கை­யை­யும் அழித்­து­வி­டும் என மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா தெரி­வித்­துள்­ளார்.

திருப்­ப­தி­யில் நடை­பெற்ற தென்­மண்­டல மன்­றக் கூட்­டத்­தில் பேசிய அவர், போதைப்பொருள் புழக்­கத்தை தடுக்க மாநில முதல்­வர்­கள் முன்­னு­ரிமை அளிக்க வேண்­டும் என்­றார்.

தென்­னிந்­தி­யா­வின் பங்­க­ளிப்பு இல்­லா­மல் இந்­தி­யா­வின் வளர்ச்சியைக் கற்­ப­னை­கூட செய்து பார்க்க முடி­யாது என்று குறிப்­பிட்ட அவர், தென்­னிந்­திய கலா­சா­ரம், பாரம்­ப­ரி­யம், மொழி­கள் ஆகி­யவை நாட்­டின் பழ­மைக்கு எடுத்­துக்­காட்­டாகத் திகழ்­வ­தா­கக் கூறி­னார்.

மேலும், போக்சோ சட்­டத்­தின் கீழ் வரும் குற்­றங்­கள் தொடர்­பில் அறவே சகிப்­புத்­தன்மை கூடாது என்­றும் அமித் ஷா வலி­யு­றுத்­தி­னார்.

"குழந்­தை­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­கள் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தவை. அந்த வழக்­கு­களை விசா­ரித்து முடிக்க 60 நாள்­கள் என்ற கால அவ­கா­சத்தைக் கடைப்­பி­டிக்க வேண்­டும்.

"வழக்­கு­களை விரை­வு­ப­டுத்த, மாநில அர­சு­கள் சட்­டப்­பி­ரிவு இயக்­கு­நர் என்ற புதிய பொறுப்பை உரு­வாக்க வேண்­டும்," என்று அமித் ஷா மேலும் கேட்­டுக் கொண்­டார்.

இந்த கூட்­டத்­தில் தமி­ழ­கம் சார்­பில் அமைச்­சர் பொன்­முடி, ஆந்­திரா சார்­பில் முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி, தெலுங்­கானா சார்­பில் அம்­மா­நில உள்­துறை அமைச்­சர் முக­மது அலி, கர்­நா­டகா சார்­பில் முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை, புதுச்­சேரி சார்­பில் முதல்­வர் ரங்­க­சாமி ஆகி­யோர் பங்­கேற்­ற­னர்.