உலகப் பயணிகளுக்கு இந்தியா கதவு திறப்பு

உலகப் பயணிகளுக்கு இந்தியா கதவு திறப்பு

2 mins read
76e2fa83-0ed6-4566-8712-19f9571cc290
-

புதுடெல்லி: இந்­தியா 20 மாதங்­களுக்­குப் பிறகு பெரிய அள­வில் வெளி­நாட்­டுப் பயணி­க­ளுக்­குக் கதவைத் திறந்­து­விட்டு உள்­ளது.

நாட்­டில் கொவிட்-19 தொற்று மட்­டுப்­பட்டு இருப்­ப­தை­யும் தடுப்­பூசி விகி­தாச்­சா­ரம் மேம்­பட்டு இருப்ப­தை­யும் கவ­னத்­தில் கொண்டு ஒத்த நில­வ­ரங்­க­ளைக் கொண்ட 99 நாடு­க­ளின் பய­ணி­கள் வரு­வ­தற்கு இந்­தியா இப்­போது அனு­ம­தித்­துள்­ளது.

இந்­தியா சென்ற ஆண்டு மார்ச் முதல் உல­கப் பய­ணி­க­ளுக்கு விசா வழங்­க­வில்லை. இப்­போது இந்­தியா செல்­வோர் தங்­க­ளைத் தாங்­களே 14 நாட்­கள் பாது­காத்­துக்கொண்­டால் போதும். தனிமை உத்­த­ரவை நிறைவேற்ற வேண்டாம்.

வாடகை விமா­னங்களில் பயணி­கள் இந்­தியா செல்ல சென்ற மாதமே அனு­மதி கொடுக்­கப்­பட்­டது. அந்த ஏற்­பாட்டை நேற்று முதல் வர்த்தக விமா­னங்­க­ளுக்­கும் இந்­திய அதி­கா­ரி­கள் நீடித்­த­னர். இந்­தி­யப் பய­ணி­கள் ஏற்­கெனவே உள்­நாட்­டில் பல இடங்­க­ளுக்­கும் செல்லத் தொடங்­கி­விட்­ட­னர்.

இந்­தி­யா­வில் சென்ற மே மாதத் தொடக்­கத்­தில் 400,000 பேருக்­கும் மேற்­பட்ட மக்­கள் அன்­றா­டம் கொவிட்-19 கிரு­மித்தொற்­றுக்கு ஆளா­னார்­கள். ஆனால் இப்­போது அன்­றாட தொற்று ஏறக்­கு­றைய 15,000 ஆக மிக­வும் குறைந்­து­விட்­டது. தீபா­வளி பண்­டி­கையை இந்த மாதம் குடும்­பம் குடும்­ப­மா­கக் கூடி இந்தியர்கள் கொண்­டா­டி­னர்.

இது ஒரு­பு­றம் இருக்க, இந்தி­யா­வில் தடுப்­பூசி இயக்­கம் பெரி­தும் சூடு­பி­டித்­துள்­ளது. ஒரு பில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

கட்­டுப்­பா­டு­கள் தளர்த்தப்­பட்டு இருப்­ப­தால் மீண்­டும் தொற்று கூடும் என்ற பயம் இருக்­கிறது. என்றா­லும் விதிகள் தளர்த்­தப்­படு­வதால் சுற்­றுப்­ ப­ய­ணத்­து­றைக்கு நல்ல வாய்ப்பு என்று இந்­திய ரயில்வே, உணவு, சுற்றுலாத் துறை­யின் சுற்­றுலா சந்தைப் பிரி­வின் இயக்­கு­நர் ரஜினி ஹசிஜா தெரி­வித்­தார்.

இருந்­தா­லும் 3வது தொற்று அலை ஆபத்து இன்­ன­மும் அறவே ஒழிந்­து­வி­ட­வில்லை என்று அவர் எச்­ச­ரித்­தார்.