டெல்லி அரசுக்கு கடும் கண்டனம்: சிறார்கள் பாதிக்கப்படுவதாக கவலை காற்று மாசு: அவசரக் கூட்டத்தை கூட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது­டெல்லி: டெல்­லி­யில் நீடித்து வரும் கடும் காற்று மாசு­பாடு குறித்து உச்ச நீதி­மன்­றம் பல்­வேறு கேள்­வி­களை எழுப்பி உள்­ளது. மேலும், இந்த விவ­கா­ரம் தொடர்­பாக டெல்லி அர­சுக்கு நீதி­ப­தி­கள் கண்­ட­னம் தெரி­வித்­த­னர்.

டெல்லி, பஞ்­சாப், உத்­த­ரப் பிர­தே­சம், ஹரி­யானா ஆகிய மாநிலங்­களில் காற்று மாசு­பாட்­டைக் கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பாக விவா­தித்து முடி­வெ­டுக்க அவ­சரக் கூட்­டத்­தைக் கூட்­டு­மா­றும் மத்­திய, மாநில அர­சு­களை உச்ச நீதி­மன்­றம் கேட்­டுக்கொண்­டுள்­ளது.

டெல்­லி­யில் காற்று மாசு பெரும் பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது. இத­னால் பொது­மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக தொடுக்­கப்­பட்­டுள்ள பல்­வேறு வழக்­கு­களை, ஒரே வழக்­காக மாற்றி உச்ச நீதி­மன்­றம் விசா­ரித்து வரு­கிறது.

நேற்று தலைமை நீதி­பதி என்.வி. ரம­ணாவை உள்­ள­டக்­கிய மூன்று நீதி­ப­தி­கள் கொண்ட அமர்­வில் நடை­பெற்ற விசா­ர­ணை­யின்­போது, காற்று மாசு தொடர்­பாக மத்­திய, மாநில அர­சு­கள் அலட்­சி­ய­மாக செயல்­ப­டக் கூடாது என்­றும், தேவை­யான நிதியை ஒதுக்­கீடு செய்து செல­விட வேண்­டும் என்­றும் நீதி­ப­தி­கள் கண்­டிப்­பு­டன் கூறி­னர்.

டெல்லி அரசு கூறும் நொண்­டிச் சாக்­கு­களை ஏற்க இய­லாது என்றும் பிறர் மீது பழி­போ­டு­வதை ஏற்க இய­லாது என்­றும் கடு­மை­யா­கச் சாடிய நீதி­ப­தி­கள், மாசு­பா­ட்டுக்­கான கார­ணங்­கள் குறித்து டெல்லி அரசு தெரி­வித்த விளக்­கங்­களை தங்­க­ளால் ஏற்க இய­லாது என்­ற­னர்.

டெல்லி அர­சின் இத்­த­கைய போக்கு, அதன் வரு­மா­னத்தை தணிக்கை செய்ய தூண்­டு­கிறது என்­றும் அதி­க­­மான போக்­கு­வரத்து, தொழிற்­சா­லை­கள், வாகன நெரி­சல் ஆகி­ய­வை­தான் காற்று மாசு­பாட்டிற்கு முக்­கிய கார­ணம் என்­றும் உச்ச நீதி­மன்­றம் கூறி­யது.

காற்று மாசு கார­ண­மாக சிறார்­க­ளுக்கு அதிக பாதிப்­பு­கள் ஏற்­ப­டு­வ­தா­கக் கவலை தெரி­வித்த நீதி­ப­தி­கள், இத்­த­கைய சூழ்­நிலை­யில் சிறார்­க­ளால் எப்படிப் பள்­ளிக்கு வர இய­லும் எனக் கேள்வி எழுப்­பி­னர்.

முன்­ன­தாக காற்று மாசு­பாட்டைக் கட்­டுப்­ப­டுத்த முழு முடக்க நிலையை அமல்­ப­டுத்த தயா­ராக இருப்­ப­தாக டெல்லி அரசு உச்ச நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தது.

பெரும் நெருக்­க­டி­யாக உரு­வெ­டுத்­துள்ள காற்று மாசு சூழ­லைச் சமா­ளிக்க ஊழி­யர்­கள் தங்­கள் வீடு­களில் இருந்­த­ப­டியே சில காலம் பணி­பு­ரி­யும் வாய்ப்­பு­கள் குறித்து மத்­திய அர­சும் சம்­பந்­தப்­பட்ட மாநில அர­சு­களும் பரி­சீ­லிக்க வேண்­டும் என உச்ச நீதி­மன்­றம் யோசனை தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், இன்று காற்று மாசு தொடர்­பாக விவா­தித்து முடி­வெ­டுக்க மத்­திய அரசு அவ­சரக் கூட்­டத்­தைக் கூட்­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!