நிர்வாக மேம்பாட்டுக்காக குழுக்கள் அமைத்த பிரதமர் மோடி

1 mins read
ee5ef8ba-13ae-4b35-afaa-55272df70045
-

புது­டெல்லி: மத்­திய அமைச்­ச­ர­வை­யில் இடம்­பெற்­றுள்ள 77 அமைச்­சர்­க­ளை­யும் எட்டு குழுக்­க­ளா­கப் பிரித்­துள்­ளார் பிர­த­மர் மோடி.

தனது தலை­மை­யி­லான மத்­திய அர­சின் நிர்­வா­கத்­தி­றனை மேம்­படுத்த ஏது­வாக அவர் இவ்­வாறு குழுக்­களை அமைத்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கிறது.

ஒவ்­வொரு குழு­வி­லும் ஒன்­பது அமைச்­சர்­கள் இடம்­பெற்­றுள்­ள­னர். மேலும், ஒவ்­வொரு குழு­வுக்­கும் மூத்த அமைச்­சர் ஒரு­வர் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரா­கச் செயல்­ப­டு­வார்.

மத்­திய அர­சின் முக்­கிய திட்­டங்­க­ளைப் பற்­றிய செயல்­பா­டு­க­ளைத் தெரி­விக்க ஒவ்வோர் அமைச்­சுக்­கும் தனி இணை­யத்­தளம் உரு­வாக்­கு­வது, அமைச்­சர்­கள் செயல்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­களைக் கண்­கா­ணிக்க தனி அமைப்பை உரு­வாக்­கு­வது, அமைச்சு நிறை­வேற்றி உள்ள திட்­டங்­க­ளைப் பற்­றிய விவ­ரங்­க­ளு­டன் கையே­டு­கள் தயா­ரிப்­பது என இக்­கு­ழுக்­கள் பல்­வேறு பணி­க­ளைக் கவ­னிக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

ஒவ்­வொரு குழு­வும் நிபு­ணத்­து­வம் உள்ள மூன்று இளம் தொழில்­நுட்ப நிபு­ணர்­க­ளைக் கொண்ட துணைக்­கு­ழுவை அமைக்க வேண்­டும் என்­றும் அக்­கு­ழு­வைக் கொண்டு ஆராய்ச்சி, தக­வல் தொடர்பு சார்ந்த விஷ­யங்­கள் குறித்து முடி­வெ­டுக்க வேண்­டும் என்­றும் பிர­த­மர் மோடி உத்­த­ர­விட்­டுள்­ள­தாக தினத்­தந்தி ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

ஏற்­கெ­னவே மத்­திய அமைச்­சர்­க­ளு­டன் பிர­த­மர் மோடி 'சிந்­தனை அமர்வு' என்ற பெய­ரில் அவ்­வப்­போது ஆலோ­சனை நடத்தி வரு­கி­றார்.

சுமார் ஐந்து மணி நேரம் இந்த ஆலோ­சனை நீடிக்­கும். இது­வரை ஐந்து 'சிந்­தனை அமர்வு' கூட்­டங்­கள் நடந்­துள்­ளன.

அச்­ச­ம­யம் தனி­ந­பர் செயல்­தி­றன், திட்ட அம­லாக்­கம், அமைச்­ச­ரவை செயல்­பாடு உள்­ளிட்ட பல்­வேறு விஷ­யங்­கள் குறித்து ஆலோ­சிக்­கப்­படும்.

இந்­நி­லை­யில், மத்­திய அமைச்­சர்­க­ளைக் கொண்ட புது குழுக்­களை அமைத்­துள்­ளார் பிர­த­மர் மோடி.