லக்கிம்பூர் வன்முறை வழக்கு: விரைவில் நீதிபதி நியமனம்

லக்கிம்பூர் வன்முறை வழக்கு: விரைவில் நீதிபதி நியமனம்

1 mins read
5fa46c0f-2dfd-4d0f-82e4-bc447d2bce64
-

புது­டெல்லி: லக்­கிம்­பூர் வன்­முறை தொடர்­பான வழக்கு விசா­ர­ணைக்கு வெளி­மா­நி­லத்­தைச் சேர்ந்த முன்­னாள் உயர் நீதி­மன்ற நீதி­ப­தியை நிய­மிக்க உத்­த­ரப் பிர­தேச அரசு ஒப்­புக்­கொண்­டுள்­ளது.

எட்டு பேரை பலி வாங்­கிய அந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக நீதி விசா­ரணை நடத்­தக் கோரி உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து, உத்­தரப் பிர­தேச மாநில உயர் நீதி­மன்ற முன்­னாள் நீதி­ப­தி­யின் மேற்­பார்­வை­யில் விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இந்­நி­லை­யில், இந்த வன்­மு­றைச் சம்­ப­வம் தொடர்­பாக மாநில காவல்­துறை உரிய வகை­யில் செயல்­ப­ட­வில்லை என உச்ச நீதி­மன்­றம் கண்­ட­னம் தெரி­வித்­தது.

மேலும், வெளி மாநில உயர் நீதி­மன்ற முன்­னாள் நீதி­ப­தி­யின் மேற்­பார்­வை­யில் விசா­ரணை நடத்­தப்­படும் என்­றும் அறி­வித்­தது. இதற்கு உத்­த­ரப் பிர­தேச அரசு எதிர்ப்பு தெரி­வித்­த­தாக செய்­தி­கள் வெளி­யான நிலை­யில், தற்­போது அதற்கு அந்த அரசு ஒப்­புக்­கொண்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, இரு நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது. எந்த நீதி­பதி வழக்கை மேற்­பா­ர்வையிடு­வார் என விரை­வில் அறி­விக்க உள்ளது.