கைக்கடிகாரங்கள் விவகாரம்: ஹர்திக் பாண்டியா விளக்கம்

கைக்கடிகாரங்கள் விவகாரம்: ஹர்திக் பாண்டியா விளக்கம்

1 mins read
8276deed-73c5-4fd0-90f0-6d62feaeca8d
-

மும்பை: தம்­மி­டம் இருந்து ஐந்து கோடி ரூபாய் மதிப்­புள்ள கைக்­க­டி­கா­ரங்­களை சுங்க அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­தாக வெளி­வந்த தக­வல்­கள் அனைத்­தும் ஆதா­ர­மற்­றவை என இந்­திய கிரிக்­கெட் வீரர் ஹர்­திக் பாண்­டியா தெரி­வித்­துள்­ளார்.

தாம் துபா­யில் இருந்து கொண்­டு­வந்த கைக்­க­டி­கா­ரங்­க­ளின் மதிப்பு ஒன்­ற­ரைக் கோடி ரூபாய் மட்­டுமே என்­றும் தமது டுவிட்­டர் பதிவு ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நானாக முன்­வந்து சுங்­கத்­துறை அதி­கா­ரி­க­ளைச் சந்­தித்து, நான் கொண்­டு­வந்த பொருள்­க­ளுக்­கான சுங்க வரி­யைச் செலுத்த விரும்­பி­னேன்.

"இதற்கு ஒத்­து­ழைத்த அதி­காரி­கள் அவற்றை மதிப்­பீடு செய்து வரு­கின்­ற­னர்," என்று ஹர்­திக் பாண்­டியா தெரி­வித்­துள்­ளார்.