வெறுப்புணர்வுப் பேச்சு: பெண் செய்தியாளர்கள் கைது

வெறுப்புணர்வுப் பேச்சு: பெண் செய்தியாளர்கள் கைது

1 mins read
d2b4ef03-2f58-4ad0-badb-4631dbc24baf
-

கவு­ஹாத்தி: சமூக வலைத்­த­ளங்­களில் வெறுப்­பு­ணர்­வைத் தூண்­டும் வகை­யில் கருத்­து­க­ளைப் பதி­விட்ட குற்­றச்­சாட்­டின் பெய­ரில் பெண் செய்­தி­யா­ளர்­கள் இரு­வரை அசாம் காவல்­துறை கைது செய்­துள்­ளது.

திரி­பு­ரா­வில் அண்­மை­யில் நிகழ்ந்த வன்­மு­றைச் சம்­ப­வம் தொடர்­பாக செய்தி சேக­ரிக்­கச் சென்ற ஆங்­கில ஊடக பெண் செய்­தி­யா­ளர்­கள் சம்­ருதி சுகன்யா, ஸ்வர்ணா ஆகிய இரு­வ­ரும் வன்­மு­றையை அடுத்து பள்­ளி­வா­சல் ஒன்று தீ வைத்­துக் கொளுத்­தப்­பட்­ட­தாக டுவிட்­ட­ரில் பதி­விட்­ட­னர்.

பின்­னர் இஸ்­லா­மி­யர்­கள் அதி­கம் வசிக்­கும் பகு­திக்­குச் சென்று வெறுப்­பு­ணர்­வைத் தூண்­டும் வகை­யில் பேசி­ய­தா­கத் தெரி ­கிறது. இதை­ய­டுத்து, அசாம் சென்­ற­போது இரு­வ­ரும் கைதா­கி­னர்.