டெங்கி: 5,000 பேர் பாதிப்பு; டெல்லியில் திடீர் அதிகரிப்பு

டெங்கி: 5,000 பேர் பாதிப்பு; டெல்லியில் திடீர் அதிகரிப்பு

1 mins read
8434969b-943f-40e6-ba3c-12cf1630c64c
-

புதுடெல்லி: டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து டெல்லியில் காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

கடந்த ஐந்து ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு டெல்­லி­யில் நடப்­பாண்டில் இது­வரை 5 ஆயிரத்­துக்­கும் அதி­க­மா­னோ­ருக்கு டெங்கி பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

கடந்த ஒரு வாரத்­தில் மட்­டும் புதி­தாக 2,569 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மொத்த எண்­ணிக்கை 5,277ஆக உள்ள நிலை­யில், வெளி மாநி­லங்­களில் இருந்து டெல்லி வந்­துள்ள 470 பேருக்கு பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. எனி­னும் மொத்த எண்­ணிக்­கை­யில் இவர்­கள் சேர்க்­கப்­ப­ட­வில்லை.

கொரோனா பாதிப்­பில் இருந்து விடு­பட்ட போதி­லும் டெல்லி மக்களின் நிம்மதி நீடிக்கவில்லை.

அண்­மைய சில வாரங்­களாக அங்கு காற்று மாசு பெரும் பிரச்சினை­யாக உருவெடுத்­துள்­ளது. இந்­நி­லை­யில் டெங்­கி பாதிப்­பு புதுக்கவ­லை­யாக உரு­வெடுத்து வரு­கிறது.