ரிக்‌ஷா தொழிலாளி விசுவாசத்துக்கு பரிசு: ரூ.1 கோடி சொத்து

ரிக்‌ஷா தொழிலாளி விசுவாசத்துக்கு பரிசு: ரூ.1 கோடி சொத்து

1 mins read
7d3dd2c9-8294-4390-b907-d9c319212f4b
மினாதி (இடது), புதா சமலி (நடுவில்). படம்: ஊடகம் -

புவ­னேஸ்­வர்: கடந்த 25 ஆண்டு­க­ளாக தனது குடும்­பத்­துக்­காக உழைத்த ரிக்‌ஷா தொழி­லா­ளிக்கு ரூ.1 கோடி மதிப்­புள்ள சொத்­து­களை எழுதி வைத்­துள்­ளார் மினாதி பட்­நா­யக் என்ற 63 வயது மூதாட்டி.

இவ­ரது கண­வர் கல்­லீ­ரல் செய­லி­ழப்­பால் கடந்த ஆண்டு கால­மா­னார்.

அதன் பின்­னர் ஒரே மகளும் மார­டைப்­பால் சில தினங்­க­ளுக்கு முன்­னர் திடீ­ரென உயி­ரி­ழந்­து­விட்டார்.

இந்­தச் சோகத்­தில் இருந்து மீள முடி­யா­மல் தவித்த மினா­திக்கு உற­வி­னர்­களில் ஒரு­வர்­கூட உதவ முன்­வ­ர­வில்லை. இந்­நி­லை­யில் ரிக்‌ஷா தொழி­லாளி புதா சமலி ((படம்) என்­ப­வ­ரது குடும்­பம் மினா­திக்கு ஆத­ர­வுக்­க­ரம் நீட்­டி­யது.

மினா­தி­யின் குடும்­பத்­துக்­காக கடந்த 25 ஆண்­டு­க­ளாக ரிக்‌ஷா ஓட்டி வந்­துள்­ளார் புதா சமலி. மினா­தி­யின் மகளை காலை பள்ளி, கல்­லூ­ரிக்கு அழைத்­துச் சென்று மாலை அழைத்து வரு­வது, அவ­ரது குடும்­பத்­தாரை வெளி­யிடங்­க­ளுக்கு அழைத்­துச் செல்­வது என்று உதவியுள்­ளார்.

25 ஆண்­டு­க­ளாக தனது குடும்­பத்­தின் அனைத்து தரு­ணங்­க­ளி­லும் உடன் நின்­ற­து­டன் எதை­யும் எதிர்­பார்க்­கா­மல் இன்­ற­ள­வும் தனக்கு ஆறு­த­லாக இருக்­கும் புதா சமலி குடும்­பத்­தின் அன்­பால் நெகிழ்ந்து போயுள்­ளார் மினாதி.

இதை­ய­டுத்து தனக்­குச் சொந்­த­மான மூன்று மாடி வீட்­டை­யும் தங்க நகை­க­ளை­யும் புதா சமலி குடும்­பத்­துக்கு அளித்­துள்­ளார் மினாதி.