விவசாயிகளின் தியாகம் நீடித்து நிலைக்கும்: மோடியின் அறிவிப்பை வரவேற்ற தலைவர்கள்

விவசாயிகளின் தியாகம் நீடித்து நிலைக்கும்: மோடியின் அறிவிப்பை வரவேற்ற தலைவர்கள்

1 mins read
3736ed2d-9d02-4329-aac1-83745c3de763
-

புது­டெல்லி: மூன்று வேளாண் சட்­டங்­களைத் திரும்­பப் பெற முடிவு செய்­துள்­ள­தாக பிர­த­மர் மோடி அறி­வித்­தி­ருப்­பது குறித்து அர­சி­யல் தலை­வர்­கள் கருத்து தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

காங்­கி­ரஸ் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ராகுல் காந்தி தனது டுவிட்­டர் பக்­கத்­தில், "விவ­சா­யி­க­ளின் சத்­தி­யா­கி­ர­கம் ஆண­வக்­கா­ரர்­களைத் தலை­கு­னி­யச் செய்­துள்­ளது. அநீ­திக்கு எதி­ரான இந்­தப் போராட்­டத்­திற்கு கிடைத்த வெற்­றிக்­காக விவ­சா­யி­க­ளுக்கு வாழ்த்து தெரி­விக்­கி­றேன்," என இந்தி­யில் குறிப்­பிட்டுள்­ளார்.

மேற்கு வங்க முத­ல­மைச்­சர் மம்தா பானர்ஜி கூறு­கை­யில், "பாஜக அளித்த இன்­னல்­களில் துவண்­டு­வி­டா­மல் அய­ராது போரா­டிய ஒவ்­வொரு விவ­சா­யிக்­கும் என் மன­மார்ந்த வாழ்த்­து­கள். இது உங்­கள் வெற்றி. இந்த போராட்­டத்­தில் அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இழந்த அனை­வ­ருக்­கும் ஆழ்ந்த இரங்­கல்­கள்," எனத் தெரி­வித்­து உள்­ளார்.

டெல்லி முதல்­வர் அரவிந்த் கெஜ்­ரி­வால் கூறு­கை­யில், "பிர­காஷ் திவாஸ் அன்று மகிழ்ச்­சி­யான செய்தி கிடைத்­துள்­ளது. மூன்று சட்­டங்­களும் நீக்­கப்­ப­டு­கின்­றன. வேளாண் சட்­டங்­க­ளுக்கு எதி­ராகப் போராடி, 700க்கும் மேற்­பட்ட விவ­சா­யி­கள் வீர­ம­ர­ணம் அடைந்­த­னர். அவர்­க­ளின் தியா­கம் என்­றும் அழி­யா­மல் இருக்­கும். விவ­சா­யி­கள் தங்­கள் உயி­ரைப் பண­யம் வைத்து விவ­சா­யத்­தை­யும் விவ­சா­யி­க­ளை­யும் எப்­ப­டிக் காப்­பாற்­றி­னார்­கள் என்­பதை வரும் தலை­மு­றை­யி­னர் நினைவுகூர்­வார்­கள். விவ­சா­யி­க­ளுக்கு தலை ­வ­ணங்­கு­கி­றேன்," என்­றார்.

தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின், ஒடிசா முதல்­வர் நவீன் பட்­நா­யக், பஞ்­சாப் முதல்­வர் சரண்­ஜித்­சிங் சன்னி உள்­ளிட்ட பல மாநில முதல்­வர்­களும் பிர­த­மர் மோடி­யின் அறி­விப்பை வர­வேற்­றுள்­ள­னர்.