'தொற்று காலத்தில் போலிசார் சிறப்பாக பணியாற்றினர்'

'தொற்று காலத்தில் போலிசார் சிறப்பாக பணியாற்றினர்'

1 mins read
573c3054-9fda-4271-926b-582b4f618b82
-

லக்னோ: கிரு­மித்­தொற்று காலத்­தில் போலி­சார் ஆற்­றிய பணி பாராட்­டுக்­கு­ரி­யது என்று மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா தெரி­வித்து உள்­ளார்.

அதே சம­யத்­தில் மத்­திய, மாநில அமைப்­பு­க­ளைச் சேர்ந்த போலி­சா­ருக்கு இடையே ஒருங்­கி­ணைப்பு மற்­றும் ஒத்­து­ழைப்பு தேவை என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லம் லக் னோவில் நேற்று டி.ஜி.பி. மற்­றும் ஐ.ஜி.க்கள் மாநாட்டை தொடங்கி வைத்து அமித் ஷா பேசி­னார்.

கொரோனா தொற்று காலத்­தில் மாநில போலி­சா­ரும் மத்­திய ரிசர்வ போலிஸ் படை­யைச் சேர்ந்த போலி­சா­ரும் தங்­களைப் பற்றி கவ­லைப் ­ப­டா­மல் மக்­க­ளுக்கு சேவை­யாற்­றி­னர் என்றார் அவர்.

"மத்­திய, மாநில போலி­சார் ஒருங்­கி­ணைந்து செயல்­பட்­டால் சட்­டம் - ஒழுங்கு பாது­காப்பு உட்பட பல்­வேறு பிரச்­னை­க­ளி­லும் மக்­க­ளுக்கு சிறப்­பாகப் பணி­யாற்ற முடி­யும்.

"பயங்­க­ர­வா­தம், போதைப் பொருள் கடத்­தல், ஆள்­க­டத்­தல் உள்­ளிட்ட குற்­றச்­செ­யல்­களைத் தடுக்க ஒத்­து­ழைப்பு மிக­வும் அவ­சி­யம்," என்று அமைச்சர் வலியுறுத் தினார்.

அனைத்து மாநி­லங்­க­ளின் காவல்­துறை இயக்­கு­நர்­கள், மத்­திய ஆயு­தப் படை­க­ளின் இயக்­கு­நர்­கள் பங்­கேற்­கும் 56வது மாநாடு லக்­னோ­வில் உள்ள உத்­த­ரப்­பி­ர­தேச காவல்­துறை தலை­மை­ய­கத்­தில் நேற்­றும் இன்­றும் இரண்டு நாட்­கள் நடை­பெ­று­கிறது.

இதில் பிர­த­மர் மோடி­யும் பங்கேற்கிறார்.