‘தொற்று காலத்தில் போலிசார் சிறப்பாக பணியாற்றினர்’

லக்னோ: கிரு­மித்­தொற்று காலத்­தில் போலி­சார் ஆற்­றிய பணி பாராட்­டுக்­கு­ரி­யது என்று மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா தெரி­வித்து உள்­ளார்.

அதே சம­யத்­தில் மத்­திய, மாநில அமைப்­பு­க­ளைச் சேர்ந்த போலி­சா­ருக்கு இடையே ஒருங்­கி­ணைப்பு மற்­றும் ஒத்­து­ழைப்பு தேவை என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லம் லக் னோவில் நேற்று டி.ஜி.பி. மற்­றும் ஐ.ஜி.க்கள் மாநாட்டை தொடங்கி வைத்து அமித் ஷா பேசி­னார்.

கொரோனா தொற்று காலத்­தில் மாநில போலி­சா­ரும் மத்­திய ரிசர்வ போலிஸ் படை­யைச் சேர்ந்த போலி­சா­ரும் தங்­களைப் பற்றி கவ­லைப் ­ப­டா­மல் மக்­க­ளுக்கு சேவை­யாற்­றி­னர் என்றார் அவர்.

"மத்­திய, மாநில போலி­சார் ஒருங்­கி­ணைந்து செயல்­பட்­டால் சட்­டம் - ஒழுங்கு பாது­காப்பு உட்பட பல்­வேறு பிரச்­னை­க­ளி­லும் மக்­க­ளுக்கு சிறப்­பாகப் பணி­யாற்ற முடி­யும்.

"பயங்­க­ர­வா­தம், போதைப் பொருள் கடத்­தல், ஆள்­க­டத்­தல் உள்­ளிட்ட குற்­றச்­செ­யல்­களைத் தடுக்க ஒத்­து­ழைப்பு மிக­வும் அவ­சி­யம்," என்று அமைச்சர் வலியுறுத் தினார்.

அனைத்து மாநி­லங்­க­ளின் காவல்­துறை இயக்­கு­நர்­கள், மத்­திய ஆயு­தப் படை­க­ளின் இயக்­கு­நர்­கள் பங்­கேற்­கும் 56வது மாநாடு லக்­னோ­வில் உள்ள உத்­த­ரப்­பி­ர­தேச காவல்­துறை தலை­மை­ய­கத்­தில் நேற்­றும் இன்­றும் இரண்டு நாட்­கள் நடை­பெ­று­கிறது.

இதில் பிர­த­மர் மோடி­யும் பங்கேற்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!