சந்திரபாபு நாயுடு கண்ணீர்; ரோஜா ‘ஹாப்பி’

அம­ரா­வதி: ஆந்­திரா முன்­னாள் முதல்­வர் சந்­தி­ர­பாபு நாயுடு தான் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கக் கூறி கண்­ணீர்­விட்­டுள்ள நிலை­யில் இப்­போ­து­தான் எனக்கு மகிழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது என்று ஒய்.எஸ்.ஆர். காங்­கி­ரஸ் கட்­சி­யின் எம்.எல்.ஏ. ரோஜா தெரி­வித்­துள்­ளார்.

ஆந்­தி­ரா­வில் தற்­போது ஜெகன்­மோ­கன் ரெட்டி தலை­மை­யி­லான ஒய்.எஸ்.ஆர். காங்­கி­ரஸ் ஆட்சி நடக்­கிறது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை அன்று இம்­மா­நில சட்­ட­மன்­றத்­தில் வேளாண் துறை தொடர்­பான விவா­தம் நடை­பெற்­ற­போது ஆளும் கட்­சிக்­கும் எதிர்க்­கட்­சிக்­கும் இடையே கடும் வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. கார­சா­ர­மான விவா­தத்­திற்­குப் பிறகு தெலுங்கு தேச கட்­சித் தலை­வ­ரும் முன்­னாள் முதல்­வ­ரு­மான சந்­தி­ர­பாபு நாயுடு சட்­ட­ச­பை­யி­லி­ருந்து வெளி­யே­றி­னார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கண்­ணீ­ரு­டன் பேசிய சந்­தி­ர­பாபு நாயுடு, "கடந்த இரண்­டரை ஆண்­டு­க­ளாக சட்­ட­ச­பை­யில் பல அவ­மா­னங்­க­ளைத் தாங்­கிக்கொண்­டேன். ஆனால் இப்­போது என் மனைவி புவ­னேஸ்­வரி மீது கடு­மை­யான, இழி­வான வார்த்­தை­ களைப் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர். அவர்களின் தாக்­கு­த­லுக்­குப் பதில் அ­ளிக்க நான் முயற்சி செய்­த­போது 'மைக்' நிறுத்­தப்­பட்­டது. இனி நாங்­கள் ஆட்­சிக்கு வந்­த­பின் முதல்­வ­ராக மட்­டுமே சட்­ட­ச­பைக்­குள் நுழை ­வேன்," என்று சூளு­ரைத்­தார்.

இந்த நிலை­யில் சந்­தி­ர­பாபு கண்­ணீர்­விட்­டது தனக்கு மகிழ்ச்­சி­ ­அளிக்­கிறது என்று முன்­னாள் நடி­கை­யும் எம்­எல்­ஏ­வு­மான ரோஜா கூறி­யுள்­ளார்.

இது தொடர்­பாக டுவிட்­ட­ரில் காணொளி ஒன்றை அவர் வெளி­யிட்­டுள்­ளார்.

அதில் "இது­தான் விதி, உங்­களை சும்­மா­வி­டாது. என்னை சட்­ட­ ச­பை­யில் இதை­விட மோச­மாக நீங்­கள் நடத்­தி­னீர்­கள். இப்­போது உங்­க­ளுக்கு அதே விஷ­யம் நடக்­கும்­போது கண்­ணீர் விடு­கி­றீர்­கள். தங்­கள் மனைவி குறித்து பேசி­விட்­ட­தற்­காக கண்­க­லங்­கும் நீங்­கள், அதி­கா­ரத்­தில் இருந்­த­போது ரோஜா, 'ப்ளூ' பிலி­மில் நடிக்­கி­றார் என சட்­ட­ச­பை­யில் சொன்­னீர்­கள். எங்­க­ளுக்கு குடும்­பம் இல்­லையா? பிள்­ளை­கள் இல்­லையா? அன்று 72 வய­தில் என்.டி.ஆரை நீங்­கள் கலங்­கச் செய்­தீர்­கள். இன்று 71 வய­தி­லேயே அதை நீங்­களும் அனு­ ப­விக்க வேண்­டிய சூழ­லுக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளீர்­கள்.

"அத­னால்தான் 'நாம் என்ன செய்­கி­றோமோ அதுதான் நமக்கு திரும்­பும்' என்று சொல்­வார்­கள். எனக்கு இப்­போ­து­தான் 'ஹாப்பி'யாக இருக்­கிறது. உங்­க­ளது போலி­யான நீலிக்­கண்­ணீ­ருக்கு யாரும் ஆதங்­கப்­பட்ட மாட்­டார்­கள்.

"எனக்­குத் தெரிந்து இனி நீங்­கள் உங்­கள் வாழ்­நா­ளில் சட்­ட ­ச­பைக்குத் திரும்ப வாய்ப்­பில்லை. அதற்கு கார­ணம் நீங்கள் செய்த சப­தம்­தான், Bye.. Bye… பாபு," என்று ரோஜா ஆவே­சத்­து­டன் பேசி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!