26 நாடுகளைச் சுற்றிய தேநீர் கடைக்காரர் மரணம்

26 நாடுகளைச் சுற்றிய தேநீர் கடைக்காரர் மரணம்

1 mins read
1a6d3224-0f3e-441b-986a-6efff94784d4
மனைவி மோகனாவுடன் கே.ஆர். விஜயன். கோப்புப் படம்:இந்திய ஊடகம் -

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள மாநி­லம் கொச்­சியைச் சேர்ந்த கேஆர் விஜ­ய­னும் 71, அவ­ரது மனைவி மோக­னா­வும் கொச்­சி­யில் 'ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்' என்ற பெய­ரில் சிறிய தேநீர் கடை ஒன்றை நடத்தி வந்­த­னர்.

அதில் வந்த வரு­மா­னத்­தில் தின­மும் 300 ரூபாய் சேமித்து 2007ல் இரு­வ­ரும் தங்­க­ளு­டைய ஆசையை நிறை­வேற்ற வெளி­நாடு சுற்­றுலா சென்­ற­னர். முத­லில் அவர்­கள் இஸ்­ரேல் சென்­ற­னர்.

அதன் பிறகு தங்­கள் சேமிப்பு மற்­றும் சிறு கடன்களின் உத­வி ­க­ளு­டன் கடந்த 14 ஆண்­டு­களில் விஜ­யன் - மோகனா தம்­பதி 26 நாடு­க­ளுக்குச் சுற்­றுலா சென்­றுள்­ள­னர்.

2019 ஆம் ஆண்டு இந்த தம்­ப­தி­ய­ரின் பய­ணத்­திற்கு தொழில் அதி­பர் ஆனந்த் மகேந்­தி­ரா­வும் உதவி செய்­துள்­ளார்.

அதன் பின்­னரே விஜ­யன் - மோகனா தம்­ப­தி­யின் சுற்­றுப்­பயணம் பற்றி பல­ருக்குத் தெரி­ய­வந்­தது. இந்­நி­லை­யில், தேநீர் கடை நடத்தி உல­கின் பல நாடு­க­ளுக்கு சுற்­றுலா சென்றுவந்த விஜ­யன் நேற்று முன்­தி­னம் கொச்­சி­யில் கால­மா­னார்.

மர­ண­ம­டைந்த விஜ­யன் தனது மனைவி மோக­னா­வு­டன் கடை­சி­யாக கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ரஷ்­யா­வுக்குச் சுற்­றுலா சென்­றார்.