செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ea53053a-ec87-420a-970f-7ca97c86d3e3
-

ராகுல்: சொன்னது நடந்தது

புது­டெல்லி: வேளாண் சட்­டங்­கள் மீட்­டுக்கொள்­ளப்­படும் விவ­கா­ரத்­தில் தான் சொன்­ன­ப­டியே நடந்­துள்­ளது என்று காங்­கி­ரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரி­வித்­துள்­ளார். கடந்த ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட மூன்று வேளாண் சட்­டங்­களும் திரும்பப் பெறப்­படும் என்று அண்­மை­யில் பிர­த­மர் மோடி அறி­வித்­தி­ருந்­தார். இதற்கு பல்­வேறு தரப்­பி­ன­ரும் வர­வேற்பு அளித்­துள்­ள­னர். ராகுல்­காந்­தி­யும் தனது டுவிட்­டர் பக்­கத்­தில், தான் சொன்னபடி நடந்துள்ளதாக பழைய காணொ­ளி­ ஒன்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில், "விவ­சா­யி­க­ளின் போராட்­டத்தைக் கண்டு பெரு­மி­தம் கொள்­கி­றேன். நான் அவர்­க­ளுடன் துணை நிற்­கி­றேன். தொடர்ந்து அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக இருப்­பேன். என்­னு­டைய வார்த்­தை­களைக் குறித்­துக் ­கொள்ளுங்­கள். இந்த அரசு வேளாண் சட்­டங்­களைத் திரும்­பப் பெறும்," என்று அவர் பேசி­யுள்­ளார்.

இதன்படி தற்போது நடந்துள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.

சட்டவிரோதமாக தங்கிய ஒன்பது

பங்ளாதேஷ் நாட்டவர்கள் கைது

மும்பை: மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கிய ஒன்பது பங்ளாதேஷ் நாட்டவர்களை போலிசார் கைது செய்தனர். தகவல் கிடைத்து பிவாண்டி தாலுகாவுக்கு உட்பட்ட சாரவல்லி கிராமத்தில் போலிசார் அதிரடிச் சோதனை நடத்தியபோது அவர்கள் பிடிபட்டனர்.

தொற்று குறைந்து வருகிறது

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று சற்று குறைந்து காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் 10,302 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களுடன் சேர்த்து மொத்தம் 3,44,999,25 பேர் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 267 பேர் பலியாகினர். இதுவரை நாட்டில்

4 லட்சத்து 65 ஆயிரத்து 349 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குண மடைந்தோர் விகிதம் 98.29% உயிரிழப்பு விகிதம் 1.35%ஆக உள்ளது.