இம்ரான் என் மூத்த சகோதரர்: சித்து பேச்சால் புது சர்ச்சை

3 mins read
c24e60e0-5b21-43c5-8ec8-9d01651368ea
கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றிருந்த நவ்ஜோத் சிங் சித்து, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கானுடன் பங்கேற்றார். கோப்புப்படம்: ஊடகம் -

காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு; பாஜக, ஆம் ஆத்மி கடும் கண்டனம்

புது­டெல்லி: பாகிஸ்­தான் பிர­த­மர் இம்­ரான்­கான் தமது மூத்த சகோ­த­ர­ரைப் போன்­ற­வர் என்று பஞ்­சாப் காங்­கி­ரஸ் தலை­வர் நவ்­ஜோத் சிங் சித்து கூறி­யி­ருப்­பது சர்ச்­சையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

மேலும், காங்­கி­ரஸ் கட்­சிக்­குள்­ளேயே அவ­ருக்கு எதிர்ப்பு கிளம்­பி­ உள்­ளது.

நேற்று முன்­தி­னம் பாகிஸ்­தான் எல்­லை­யில் அமைந்­துள்ள கர்­தார்­பூர் சாஹிப் குருத்­துவா­ரா­வுக்குச் சென்­றி­ருந்­தார் முன்­னாள் கிரிக்­கெட் வீர­ரான சித்து.

அவ­ருக்கு பிர­த­மர் இம்­ரான்­கான் சார்­பாக வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

அப்­போது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய சித்து, தமக்கு அளிக்­கப்­பட்ட வர­வேற்பை மிகப்­பெ­ரிய கௌர­வ­மா­கக் கரு­து­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"பிர­த­மர் இம்­ரான்­கான் என்­மீது மிகுந்த அன்பு வைத்­துள்­ளார். அவர் எனக்கு மூத்த சகோ­த­ர­ரைப் போன்­ற­வர். கர்­தார்­பூர் சாஹிப் குருத்­துவாரா இந்­தியா, பாகிஸ்­தான் இடையே புதிய நட்­பு­றவைத் திறக்­கட்­டும்," என்­றார் சித்து.

இம்­ரான்­கானை தமது சகோ­த­ரர் என்று சித்து குறிப்­பிட்­ட­து­தான் சர்ச்­சையை ஏற்­ப­டுத்தி உள்­ளது. காங்­கி­ரஸ் மட்­டு­மல்­லா­மல் பாஜக, ஆத் ஆத்மி உள்­ளிட்ட கட்­சி­களும் அவ­ருக்­குக் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன.

சித்­து­வின் பேச்சு இந்­தி­யர்­களுக்கு கவலை அளித்­துள்­ள­தாக பாஜக செய்­தித் தொடர்­பா­ளர் சம்பித் பத்ரா தெரி­வித்­துள்­ளார்.

காங்­கி­ர­சார் இந்­துக்­க­ளின் மனதைப் புண்­ப­டுத்­தும் நிலை­யில், ராகுல் காந்தி இந்­துத்­து­வாவை விமர்­சிப்­ப­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், பாகிஸ்­தான் பிர­த­மரை தமது மூத்த சகோ­த­ரர் என்று சித்து குறிப்­பி­டு­வ­தைப் பார்க்­கும்­போது, ஏதோ மிகப்­பெ­ரிய வேலை நடப்பதா­கத் தோன்­று­கிறது என்­றார்.

காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் மணிஷ் திவாரி தமது டுவிட்­டர் பதி­வில், எல்­லைப் பகு­தி­யில் வீர­ம­ர­ணம் அடைந்த, உயிர்த்­தி­யா­கம் செய்த இந்­திய சகோ­த­ரர்­களை மறக்க முடி­யுமா என சித்­து­வுக்கு கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

"இம்­ரான் கான் யாருக்கு வேண்­டு­மா­னா­லும் மூத்த சகோ­த­ர­ராக இருக்­கட்­டும். ஆனால், அவர் ஐஎஸ்ஐ, ராணு­வம் மூலம் இந்­தி­யா­வுக்­குள் தீவி­ர­வா­தத்தைப் பரப்­பு­ப­வர்.

"பஞ்­சாப், காஷ்­மீ­ருக்­குள் ஆளில்லா வானூர்­தி­கள் மூலம் ஆயு­தங்­கள், போதை மருந்­து­களை அனுப்­பு­கி­றார் இம்­ரான்," என்று மணிஷ் திவாரி தெரி­வித்­துள்­ளார்.

பாஜக நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் கிரிக்­கெட் வீர­ரு­மான கவு­தம் கம்­பீ­ரும், தமது டுவிட்­டர் பதி­வில் சித்­து­வுக்­குப் பதி­லடி கொடுத்­துள்­ளார்.

சித்து முத­லில் தனது பிள்­ளை­களை நாட்­டின் எல்­லை­யைப் பாது­காக்க அனுப்ப வேண்­டும் என்­றும் அதன் பிறகு வேண்­டு­மா­னால் இம்­ரான் கானை மூத்த சகோ­த­ரர் என அழைக்­கட்­டும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

காஷ்­மீரில் கடந்த ஒரு மாதத்­தில் மட்­டும் நாற்­ப­துக்­கும் மேற்­பட்ட அப்­பாவி மக்­களும் இந்­திய வீரர்­களும் கொல்­லப்­பட்­டது குறித்து இது­வரை சித்து ஒரு வார்த்­தை­கூட பேச­வில்லை என்று காம்­பீர் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

இந்­தி­யா­வைக் காக்­க ­போ­ரா­டு­பவர்­களை சித்து எதிர்ப்­ப­தா­க­வும் இதை­விட வெட்­கக்­கே­டான செயல் ஏது­மில்லை என்­றும் காம்­பீர் காட்­டத்­து­டன் குறிப்­பிட்­டுள்­ளார்.

ராகுல் காந்­திக்கு நெருக்­க­மாக இருப்­ப­வர்­கள் பாகிஸ்­தானை விரும்­பு­வ­தில் வியப்பு ஏதும் இல்லை என பாஜக தொழில்­நுட்­பப் பிரி­வின் தலை­வர் அமித் மாள­வியா தெரி­வித்­துள்­ளார்.

"காங்­கி­ரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சித்­துவை மிக­வும் பிடிக்­கும். அந்த சித்து தான் இப்போது பாகிஸ்­தான் பிர­த­மரை மூத்த சகோ­த­ரர் என்று குறிப்­பி­டு­கி­றார். சித்து ஏற்­கெ­னவே பாகிஸ்­தான் ராணு­வத் தள­ப­தி­யான பஜ்­வாவை கட்­டி­யணைத்­துப் புகழ்ந்­த­வர்," என்று அமித் மாள­வியா டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஆம் ஆத்மி கட்­சிப் பிர­மு­கர்­களும் சித்­து­வுக்கு கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.