தொழிலாளி குழந்தையின் சிகிச்சைக்கு ரூ.16 கோடி: உதவிக்கரம் நீட்டிய நிறுவனம்

தொழிலாளி குழந்தையின் சிகிச்சைக்கு ரூ.16 கோடி: உதவிக்கரம் நீட்டிய நிறுவனம்

2 mins read
c700b39e-ec9c-4c41-b590-9cd0de0b3586
குழந்தை சிருஷ்டியுடன் சதீஷ் குமார் தம்பதியர். படம்: ஊடகம் -

ஸ்ரீந­கர்: தங்­கள் நிறு­வ­னத்­தில் பணி­யாற்றி வரும் தொழி­லா­ளி­யின் பச்­சி­ளம் குழந்­தைக்கு சிகிச்சை அளிக்க 16 கோடி ரூபாயை அளித்து உத­வி­யுள்­ளது பொதுத்­துறை நிறு­வ­ன­மான சவுத் ஈஸ்­டர்ன் கோல்­ஃபீல்ட்ஸ்.

சத்­தீஸ்­கர் மாநி­லத்­தில் இயங்கி வரும் இந்த நிறு­வ­னத்­தில் வேலை பார்த்து வரு­கி­றார் சதீஷ் குமார். இவ­ரது இரண்டு வயது மகள் சிருஷ்டி ராணி முது­கெ­லும்பு தசைச்­சி­தைவு நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்.

மிக அரிய வகை நோயான இதற்கு சிகிச்சை அளிக்க பெருந்­தொகை செல­வா­கும். குறிப்­பாக அமெ­ரிக்­கா­வில் மட்­டுமே கிடைக்­கக்­கூ­டிய 'ஜேர்­ஜென்ஸ்மா' ஊசி மருந்து சிகிச்­சைக்குத் தேவைப்­படும். இதன் விலை ரூ.16 கோடி ஆகும்.

இந்த நோய் தாக்­கி­னால் முது­குத்­தண்­டும் மூளை­யில் உள்ள நரம்­பு­களும் அணுக்­கள் இழப்­பால் பாதிக்கப்படுகின்றன. மேலும் தசை­க­ளின் இயக்­கத்தை கட்­டுப்­படுத்த முடி­யா­மல் போய்­வி­டும் என்­கி­றார்­கள் மருத்­துவ நிபு­ணர்­கள். இது மர­பணு கோளாறு என்­றும் குறிப்­பி­டப்­ப­டு­கிறது.

இத­னால் சதீஷ்­கு­மார் கடும் அதிர்ச்சி அடைந்­தார். இது­கு­றித்து தமது நிறு­வ­னத்­தின் மேல­தி­கா­ரி­க­ளின் கவ­னத்­துக்­குக் கொண்டு சென்ற அவர், தமக்கு உத­வு­மாறு கண்­ணீர் மல்க கோரிக்கை விடுத்­துள்­ளார். இதை­ய­டுத்து அவர் எதிர்­பா­ராத வகை­யில், ரூ.16 கோடிக்­கான காசோ­லையை அவ­ரி­டம் ஒப்­ப­டைத்­துள்­ளது சவுத் ஈஸ்­டர்ன் கோல்­ஃபீல்ட்ஸ் நிறு­வ­னம்.

"ஊழி­யர்­களும் அவர்­க­ளின் குடும்­பங்­க­ளும்­தான் ஒரு நிறு­வ­னத்­தின் உண்­மை­யான செல்­வம்.அவர்­க­ளு­டைய உயி­ரைக் காப்­பாற்று­வ­து­தான் நிறு­வ­னத்­தின் முதன்­மைப் பணி. அதற்கு முன்­மா­தி­ரி­யா­கச் செயல்­பட்­டுள்­ளோம்," என அந்­நி­று­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

தற்­போது வீட்­டி­லேயே தங்கி சிகிச்சை பெற்று வரும் சிருஷ்டி ராணிக்கு செயற்கை சுவா­சக் கருவி பொருத்­தப்­பட்­டுள்­ளது.

சிகிச்­சைக்­குத் தேவை­யான தொகை கிடைத்­து­விட்­டதை அடுத்து மிக விரை­வில் அக்­கு­றிப்­பிட்ட ஊசி வர­வ­ழைக்­கப்­படும் எனத் தெரி­கிறது.