சிறந்த காவல் நிலையம்: திருச்சிக்குப் பெருமை

சிறந்த காவல் நிலையம்: திருச்சிக்குப் பெருமை

1 mins read
04632613-93d1-4f44-8012-bbcb6bd4bbcd
-

புது­டெல்லி: இந்­திய அள­வில் சிறந்த காவல் நிலை­யங்­க­ளுக்­கான பட்­டி­ய­லில் திருச்சி மாவட்­டத்­தில் உள்ள தொட்­டி­யல் காவல் நிலை­யம் இடம்­பெற்­றுள்­ளது. பட்­டி­ய­லில் அது எட்­டாம் இடத்­தைப் பிடித்­துள்­ளது.

தர­வுப் பகுப்­பாய்வு, நேர­டிக் கண்­கா­ணிப்பு, பொது­மக்­க­ளின் கருத்து ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் தேசிய அள­வில் சிறப்­பா­கச் செயல்­படும் பத்து காவல் நிலை­யங்­கள் தேர்வு செய்­யப்­ப­டு­கின்­றன.

இந்த ஆண்­டுக்­கான பட்­டி­யலை உள்­துறை அமைச்சு வெளி­யிட்­டுள்­ளது. அதில் பத்து சிறந்த காவல் நிலை­யங்­களில் தமி­ழ­கத்­தில் உள்ள தொட்­டி­யம் காவல் நிலை­யம் இடம்­பெற்­றது.

இந்­தக் காவல் நிலை­யத்­தில் காவல் ஆய்­வாளா் மோகன்­ராஜ், இரண்டு உதவி ஆய்­வா­ளா்­கள், ஒரு சிறப்பு உதவி ஆய்­வாளா் உட்பட 30 பேர் பணிபுரிகின்றனர்.