ஆறு புதிய நிபந்தனைகள்; நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டமும் நடக்கும் போராட்டம் நீடிக்கும் என விவசாயிகள் அறிவிப்பு

ஆறு புதிய நிபந்தனைகள்; நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டமும் நடக்கும் போராட்டம் நீடிக்கும் என விவசாயிகள் அறிவிப்பு

2 mins read
8e1a0ce5-023a-4bfc-b5e2-f3dab1988b2b
-

புது­டெல்லி: புதிய வேளாண் சட்­டங்­க­ளைத் திரும்­பப் பெறு­வ­தாக மத்­திய அரசு அறி­வித்­துள்ள நிலை­யில், தங்­க­ளது போராட்­டம் நீடிக்­கும் என விவ­சா­யி­கள் அறி­வித்­துள்­ள­னர்.

மேலும், மத்­திய அர­சுக்கு ஆறு புதிய நிபந்­த­னை­க­ளை­யும் விதித்­துள்­ள­னர்.

நாடு முழு­வ­தும் உள்ள நாற்­பது விவ­சாய சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பின் ஆலோ­ச­னைக் கூட்­டம் நேற்று முன்­தி­னம் டெல்லி மாநில எல்­லை­யில் நடை­பெற்­றது என்­றும் அதில் போராட்­டங்­களைத் தொடர்ந்து நடத்­து­வது என முடிவு எடுக்­கப்­பட்­ட­தா­க­வும் விவ­சாய சங்க தலை­வர்­களில் ஒரு­வ­ரான பல்­பில் சிங் ரஜே­வால் தெரி­வித்­தார்.

கூட்­டத்­துக்­குப் பின்­னர் செய்தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், விவ­சா­யி­க­ளின் பிற கோரிக்­கை­களை­யும் மத்­திய அரசு நிறை­வேற்ற வேண்­டும் என்­றார்.

மின்­சார மசோ­தாவை ரத்து செய்ய வேண்­டும், லக்­கிம்­பூர் கேரி வன்­மு­றைக்கு கார­ண­மான மத்­திய அமைச்­சர் அஜய் மிஸ்­ராவை பதவி நீக்­கம் செய்ய வேண்­டும், விவ­சா­யி­கள் மீது போடப்­பட்ட வழக்­கு­களை திரும்­பப் பெற வேண்­டும் என விவ­சா­யி­கள் நிபந்­த­னை­கள் விதித்­துள்­ள­னர்.

குறைந்தபட்ச ஆத­ரவு விலையை சட்­டபூர்­வ­மாக்க வேண்­டும் என்­றும் இதற்­கான தனிச் சட்­டம் இயற்­றப்­பட வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

போராட்­டத்­தில் பலி­யான 750க்கும் மேற்­பட்ட விவ­சா­யி­களின் குடும்­பத்­தி­ன­ருக்கு இழப்­பீடு வழங்­கப்­பட வேண்­டும் என்றும் பயிர்க்கழிவுகள் எரித்­ததற்­காக போடப்­பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்­டும் என்­றும் விவ­சா­யி­கள் தரப்பு நிபந்­தனை விதித்­துள்­ளது.

இது தொடர்­பாக பிர­த­மர் மோடிக்கு கடி­தம் அனுப்பி உள்­ள­தாக பல்­பில் சிங் ரஜே­வால் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்ற குளிர்­கால கூட்­டத் தொடர் வரும் 29ஆம் தேதி தொடங்க உள்­ளது. இதை­ய­டுத்து கூட்­டத்­தொ­ட­ரின் முதல் நாளன்றே புதிய சட்­டங்­களை ரத்து செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மத்­திய அரசு மேற்­கொள்ள வேண்­டும் என விவ­சா­யி­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கி, ஓராண்டு நிறைவடையும் நாளான வரும் 26ஆம் தேதி டெல்லியின் அனைத்து எல்லைகளிலும் விவசாயிகள் பெருமளவில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மேலும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடக்கும் அனைத்து நாள்களிலும் ஐநூறு விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி அமைதியான முறையில் டிராக்டர் பேரணி செல்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் இம்முடிவு பாஜக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.