தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இன்னொரு தாஜ்மகால்: ஒரு கணவரின் அன்புப் பரிசு

1 mins read
073b630f-b8c3-45e2-99f1-93220cf85327
ஆனந்த் சோக்சி கட்டியுள்ள தாஜ்மகால் வீடு. படம்: ஊடகம் -

போபால்: அன்பு மனைவி மும்­தா­ஜுக்­காக முக­லாய மன்­னர் எழுப்­பிய தாஜ்­ம­கால், காதல் சின்ன­மா­கப் போற்­றப்­ப­டு­கிறது.

இந்­தி­யா­வின் ஆக்ரா நக­ரில் அமைந்­துள்ள அந்த நினை­வுச் சின்­னத்­தைப் போலவே, தம் அன்பு மனை­விக்கு வீடு கட்­டித் தந்­துள்­ளார் மத்­தியப் பிர­தேச மாநி­லம், புர்­கான்­பூ­ரைச் சேர்ந்த ஆனந்த் சோக்சி.

நான்கு படுக்­கை­யறை கொண்ட இவ்­வீடு, முழுக்க முழுக்க தாஜ்­ம­கா­லைப் போலவே அமைக்­கப்­பட்­டுள்­ளது. இத­னைக் கட்டி முடிக்க மூவாண்­டு­கள் ஆயிற்று.

இவ்­வீட்­டைக் கட்­டி­ய­போது பல சவால்­களை எதிர்­கொண்­ட­தா­கக் கூறு­கி­றார் அத­னைக் கட்­டிய பொறி­யா­ளர்.

இதற்­காக தாஜ்­ம­கா­லுக்கு நேரில் சென்று, அதனை அணுக்­க­மாக ஆராய்ந்து வந்­தார் அவர்.

அத்­து­டன், வீட்­டின் உள்­வ­டிவ­ அமைப்­பிற்­காக மேற்கு வங்க மாநி­லம் மற்­றும் இந்­தூர் நக­ரைச் சேர்ந்த கலை­ஞர்­க­ளின் உத­வி­யை­யும் அவர் நாடி­னார்.

வீட்­டின் குவி­மா­டம் 29 அடி உய­ரம் கொண்­டது. தாஜ்­ம­கா­லில் இருப்­ப­தைப் போன்ற தூண்­களும் நிறு­வப்­பட்­டுள்­ளன.

வீட்­டின் தளம் ராஜஸ்­தான் மாநி­லம், மக்­ரானா நக­ரில் உரு­வாக்­கப்­பட்­டது. வீட்­டின் அறை­க­லன்­கள் மும்பை நக­ரைச் சேர்ந்த கைவி­னை­ஞர்­களால் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

வசிப்­பறை, கீழ்த்­த­ளத்­தி­லும் மேல் தளத்­தி­லும் தலா இரு படுக்கையறைகள், நூல­கம், தியான அறை என இவ்­வீடு மிகவும் ஆடம்­ப­ர­மா­க­வும் மிகுந்த பொருட்­செ­ல­வி­லும் கட்­டப்­பட்­டுள்­ளது.

அது மட்­டு­மின்றி, உண்­மை­யான தாஜ்­ம­கால் இர­வில் எப்­படி ஒளி­ருமோ, அதே­போன்று ஒளி­ரும் வகை­யில் வீட்­டின் உள்­ளே­யும் வெளி­யே­யும் மின்­னொளி அமைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.