மோடி: காவல்துறைக்கு உயர் ஆற்றல் தொழில்நுட்பம் தேவை

மோடி: காவல்துறைக்கு உயர் ஆற்றல் தொழில்நுட்பம் தேவை

1 mins read
b04b7610-9f9a-41a3-abad-1335fed6456a
-

லக்னோ: நாடு முழு­வ­தும் காவல் துறை­யில் பல்­வேறு மாற்­றங்­கள் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் பொது மக்­கள் மீதான போலி­சா­ரின் அணு­கு­மு­றை­யில் நேர்­ம­றை­யான மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது பாராட்­டத்­தக்­கது என்­றும் பிர­த­மர் மோடி கூறி­யுள்­ளார்.

உத்­த­ரப் பிர­தே­சத்­தில் நடை­பெற்ற 56ஆவது காவல்­துறை தலை­வர்­கள் மாநாட்­டில் கலந்து கொண்டு பேசிய அவர், காவல் துறைக்கு உத­வும் வகை­யில் உயர் ஆற்­றல் தொழில்­நுட்­பம் உரு­வாக்­கப்­பட வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார்.

"கடந்த 2014ஆம் ஆண்டு நவீ­ன­கா­வல் துறை திட்­டத்தை மத்­திய ­அ­ரசு கொண்டு வந்­தது. அந்­தத் திட்­டத்தை காவல்துறை தலை­வர்­கள் மேம்­ப­டுத்தி பொது­மக்­க­ளுக்கு பயன்­ப­டும்­படி செயல்­ப­டுத்த வேண்­டும்.

"மக்­கள் நல­னுக்­காக ஆளில்லா வானூர்தி தொழில்­நுட்­பத்தை நேர்­மறை­யான செயல்­க­ளுக்கு போலி­சார் பயன்­ப­டுத்­த­லாம். காவல்­துறை எதிர்­கொள்­ளும் வழக்­க­மான சவால்­களை எதிர்­கொள்ள தேவைப்­படும் தொழில்­நுட்­பத்தை உரு­வாக்­கும் பணி­யில் உயர் தகுதி வாய்ந்த இளை­யர்­களை ஈடு­ப­டுத்­த­லாம்," என்­றார் பிர­த­மர் மோடி.