கொழும்பு: எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து $500 மில்லியன் கடன் வாங்க இலங்கை திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே இரண்டொரு நாளில் புதுடெல்லி வருகிறார்.
அவரது பயணத் திட்டத்தை இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல் பெரில் நேற்று முன்தினம் அறிவித்தார். இலங்கைக்கான இந்தியத் தூதரிடம் பசிலின் பயணத் திட்டம் தரப்பட்டுள்ளது. இந்தியாவிடம் கடன் வாங்கு
வதோடு இலங்கையில் இந்தியாவின் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையிலும் பசில் ஈடுபடுவார் என்றார் திரு பெரிஸ். இலங்கை தற்போது கடுமையான அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது.
அதனால் அந்நாடு தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யை வாங்க இயலவில்லை. நாட்டில் உள்ள ஒரே கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தியும் அண்மையில் நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்று, உணவுப் பொருள் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு போன்றவையும் இலங்கையை வாட்டுகின்றன.