நிர்மலா: கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியவர்களை விடமாட்டோம்

1 mins read
94c63233-49cd-49e1-94c1-bd3ae5acaa5c
-

ஸ்ரீந­கர்: வங்­கி­களில் கடன் பெற்று அதை திருப்­பிச் செலுத்­தா­மல் வெளி­நாட்­டுக்கு தப்­பி­ய­வர்­களை மத்­திய அரசு சும்­மா­வி­டாது என மத்­திய நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் தெரி­வித்­துள்­ளார்.

ஜம்­மு­வில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய அவர், வங்­கி­யில் கடன் பெற்றுவிட்டு அதை திருப்­பிச் செலுத்­தா­த­வர்­களை நிதி­ய­மைச்சு துரத்­தி­ய­தா­கக் குறிப்­பிட்­டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலை­மை­யி­லான அரசு பத­விக்கு வந்­த­போது வாராக்­க­டன் கவ­லைக்­கு­ரிய அம்­ச­மாக இருந்­தது என்­றும் அதன் பிறகு அத்­த­கைய கடன்­களை மீட்­ப­தற்கு மேற்­கொண்ட முயற்­சி­கள் நல்ல பலன்­களைத் தந்­துள்­ளன என்­றும் நிர்­மலா சீதா­ரா­மன் தெரி­வித்­தார்.

"கடனை திருப்­பிச் செலுத்­தா­த­வர்­கள் இந்­தி­யா­வில் இருந்­தா­லும் வெளி­நாட்­டுக்குத் தப்பி ஓடி இருந்­தா­லும் விட­வில்லை. அவர்­க­ளது சொத்­து­கள் முடக்­கப்­பட்­டன. அவை சட்­ட­ரீ­தி­யாக விற்­கப்­பட்டோ, ஏலம் விடப்­பட்டோ கிடைத்த பணத்தை வங்­கி­யி­டமே திருப்பி ஒப்­ப­டைத்­தோம்," என்­றார் நிர்­மலா சீதா­ரா­மன்.

விஜய் மல்­லையா, நீரவ் மோடி மட்டு­மின்றி மேலும் பலர் வங்கி­களில் கடன் பெற்று மோசடி செய்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், அத்­த­கை­ய­வர்­க­ளின் சொத்­து­களை நீதி­மன்­றத்­தின் அனு­ம­தி­யோடு விற்று, அதன்­வழி கிடைக்­கும் தொகை வங்­கி­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும் என்­றார்.