மணக்கோலத்துடன் கல்லூரி தேர்வை எழுதிய மாணவி

மணக்கோலத்துடன் கல்லூரி தேர்வை எழுதிய மாணவி

1 mins read
d71aee53-57af-4bc1-919f-042d15c104db
மணக்கோலத்தில் தேர்வு எழுதும் ஷிவாங்கி. படம்: ஊடகம் -

ராஜ்­கோட்: திரு­மணம் நடை­பெற இருந்த நாளன்று கல்­லூரி தேர்­வும் நடை­பெற்­ற­தால், மாணவி ஒரு­வர் மணக்­கோ­லத்­து­டன் அத்­தேர்வை எழுதி முடித்­தார். இந்­த சுவா­ர­சி­ய­மான சம்­ப­வம் குஜ­ராத் மாநி­லத்­தில் நடை­பெற்­றது.

ராஜ்­கோட் பகு­தி­யைச் சேர்ந்த ஷிவாங்கி பக்­தா­ரியா என்ற அம்­மாணவி அங்­குள்ள கல்­லூ­ரி­யில் இள­நிலை பட்­ட­ப­டிப்பை மேற்­கொண்­டுள்­ளார். இந்­நி­லை­யில், அவ­ருக்­கும் பார்த் பட்­டா­லியா என்­ப­வ­ருக்­கும் சில மாதங்­க­ளுக்கு முன்பு திரு­ம­ணம் நிச்­ச­ய­மா­னது.

நவம்­பர் 24ஆம் தேதி (நேற்று) திரு­ம­ணத்தை நடத்த இரு­வீட்­டா­ரும் முடிவு செய்­த­னர். ஆனால் எதிர்­பா­ராத வித­மாக அதே நாளில் அவ­ரது கல்­லூ­ரி­யில் பரு­வத்­தேர்வு நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்டது.

இத­னால் என்ன செய்­வது என முத­லில் குழம்­பிய ஷிவாங்கி, பின்­னர் எப்­ப­டி­யா­வது தேர்வை எழுத வேண்­டும் என முடிவு செய்­தார். தமது விருப்­பத்தை அவர் தனது வருங்­கால கண­வ­ரி­டம் எடுத்­துச் சொல்ல, மண­ம­கன் பார்த் பட்­டாலியா­வும் அதற்குச் சம்­ம­தித்­தார்.

இதை­ய­டுத்து, ஷிவாங்கி தனது தேர்வை எழுதி முடித்த பின்­னர், சில மணி நேரம் கழித்து திரு­மணத்தை வைத்­துக்கொள்­வது என மண­மக்­க­ளின் குடும்­பத்­தா­ரும் முடிவு செய்­த­னர்.

அதன்­படி, நேற்று காலை மணப்­பெண் கோலத்­தில் தேர்வு மையத்­துக்கு வந்­தார் ஷிவாங்கி. அதன் பின்­னர் அவர் தேர்வு எழுதி முடித்­தார். அவ­ருக்­காக மண­ம­கனும் மணக்­கோ­லத்­து­டனே தேர்வு மையத்­துக்கு வந்து காத்­தி­ருந்­தார்.

இதை­ய­டுத்து இரு­வ­ரும் திரு­மண மண்­ட­பத்­துக்­குப் புறப்­பட்­டுச் சென்­ற­னர். பின்­னர் திரு­ம­ணம் நடந்­தே­றி­யது.