கேரளா: கவலை தரும் மரண எண்ணிக்கை, பாதிப்பு

நிபுணர்கள்: இந்தியாவில் மூன்றாவது அலையால் அதிக பாதிப்புகள் இருக்காது

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா தொற்று பாதிப்­புக்­காக தற்­போது சிகிச்சை பெற்று வரு­வோர் எண்­ணிக்கை வெகு­வா­கக் குறைந்­துள்­ளது.

கடந்த 537 நாட்­களில் இல்­லாத வகை­யில் சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை 111,481ஆக உள்­ளது.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் தொற்று பாதிப்­பால் நாடு முழு­வ­தும் 437 பேர் பலி­யா­கி­விட்­ட­னர். இவற்­றுள் 370 இறப்­புச் சம்­ப­வங்­கள் கேர­ளா­வில் பதி­வாகி உள்­ளன.

அம்­மா­நி­லத்­தில் பாதிக்­கப்­ப­டு­வோர், உயி­ரி­ழப்­போர் எண்­ணிக்கை இன்­னும் கட்­டுக்­குள் வர­வில்லை.

நேற்று முன்­தி­னம் இந்­தி­யா­வில் புதி­தாக 9,283 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது. இவர்­களில் சுமார் ஐந்­தா­யி­ரம் பேர் கேர­ளா­வைச் சேர்ந்­த­வர்­கள்.

நாட்­டில் அன்­றா­டம் பதி­வா­கும் தொற்று எண்­ணிக்­கை­யில் கேர­ளா­வின் பங்­க­ளிப்பு 50 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மாக இருந்து வரு­கிறது.

எனி­னும், நேற்று முன்­தி­னம் அங்கு கொரோனா தொற்­றில் இருந்து 5,978 பேர் மீண்­டுள்­ள­னர் என்­பது ஆறு­த­லுக்­கு­ரிய தக­வல். இது­வரை 38,045 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

அம்­மா­நி­லத்­தில் விடு­பட்ட மர­ணச் சம்­ப­வங்­களை இப்­போது பதிவு செய்து வரு­கின்­ற­னர். அந்த வகை­யில் கடந்த அக்­டோ­பர் 27ஆம் தேதி உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை ஆக அதி­க­மாக 585ஆகப் பதி­வா­னது.

அதே­போல் நேற்று முன்­தி­னம் பதி­வான மரண எண்­ணிக்­கை­யில் 57 இறப்­புச் சம்­ப­வங்­கள் கடந்த சில நாள்­களில் விடு­பட்டுபோன­வை­யா­கும். மீத­முள்ள 313 மர­ணச் சம்­ப­வங்­கள் முன்பே நிகழ்ந்­தவை என்­றும் உச்ச நீதி­மன்­ற­மும் மத்­திய அர­சும் வகுத்­துள்ள புதிய வழி­காட்டி நெறி­மு­றை­க­ளின்­படி, இப்­போது கொரோனா மர­ணங்­க­ளா­கப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொரோனா ஊர­டங்கு வேளை­யில், இந்­தி­யா­வில் குழந்தை பிறப்பு அதி­க­மாக இருந்­துள்­ளது. ஆனால், கேர­ளா­வில் நேர்­மா­றாக குழந்தை பிறப்பு விகி­தம் குறைந்­துள்­ள­தாக அம்­மா­நில அரசு தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் கொரோனா மூன்­றா­வது அலை ஏற்­பட்­டா­லும் அத­னால் பாதிப்­பு­கள் அதி­கம் இருக்­காது என நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

மூன்­றா­வது அலை ஏற்­ப­டுமா என்­ப­தைக் கணிக்க இய­லாது என்­றும் அவ்­வாறு அலை ஏற்­பட்­டால் அது மென்­மை­யா­ன­தா­கவே இருக்­கும் என்­றும் சென்­னை­யில் உள்ள கணித அறி­வி­யல் நிறு­வ­னத்­தின் இயற்­பி­யல் பேரா­சி­ரி­யர் சீதாப்ரா சின்கா தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!