கொம்பால் அடிகுழாயை இயக்கி, தாகம் தீர்த்த எருமை!

விலங்குகளின் வித்தியாசமான செயல்கள் ஒருபோதும் இணையவாசிகளைக் கவரத் தவறுவதில்லை.


அவ்வகையில், எருமை ஒன்று தனது கொம்பால் அடிகுழாயை இயக்கி, நீர் அருந்தி, தாகம் தீர்த்துக்கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.


அந்த அடிகுழாயைச் சுற்றி எருமைக் கூட்டம் நின்றிருப்பதை அக்காணொளி காட்டுகிறது. அவற்றில் ஒரு எருமை, தனது கொம்பால் அடிகுழாயின் நெம்புகோலை மேலும் கீழும் உயர்த்த, குழாய் வழியாக நீர் கொட்டுகிறது.


பின்னர், தரையில் நீர் கொட்டும் இடத்தில் இருக்கும் சிறுகுழியில் தேங்கி இருக்கும் நீரை அவ்விலங்கு பருகுகிறது.


ஐபிஎஸ் அதிகாரி தீபான்சு காப்ரா அந்தக் காணொளியைத் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். கிட்டத்தட்ட 215,000 பேர் அதனைக் கண்டுள்ளனர்.


எருமையின் அறிவுக்கூர்மையைக் கண்டு பலரும் வியந்துபோயினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!