கர்நாடகா: அரசு அதிகாரிகள் வீடுகளில் அதிரடி சோதனை

லஞ்சப் புகார்: மூத்த அதிகாரி குவித்த ரூ.100 கோடி; நகைகள், ரொக்கப் பணம் பறிமுதல்

பெங்­களூரு: கர்­நா­ட­கா­வில் 15 அரசு அதி­கா­ரி­க­ளின் வீடு­கள், அலு­வ­ல­கங்­கள் உட்­பட பல்­வேறு இடங்­களில் லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யால் மேற்­கொள்­ளப்­பட்ட அதி­ரடி சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது லட்­சக்­க­ணக்­கில் ரொக்­கப் பணம், பல கோடி மதிப்­புள்ள நகை­கள், சொத்து ஆவ­ணங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் பொது­மக்­க­ளி­டம் இருந்து பெரு­வா­ரி­யாக லஞ்­சம் பெற்­ற­தாக எழுந்த புகார்­க­ளின் பேரில் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக லஞ்ச ஒழிப்­புத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

சில அதி­கா­ரி­கள் தங்­கள் வீடு­களில் உள்ள தண்­ணீர் குழாய்­கள், இரு­சக்­கர வாக­னங்­க­ளின் இருக்கைக்­குக் கீழ் உள்ள பகுதி­கள் என்று பல இடங்­களில் ரொக்­கப் பணத்­தை­யும் நகை­க­ளை­யும் பதுக்கி வைத்­தி­ருந்­தது தெரி­ய­வந்­தது.

அர­சுப் பணி­களை மேற்­கொள்­வதற்கு மாத ஊதி­யம் பெறும் இந்த அதி­கா­ரி­கள், எத்­த­கைய பணி­யாக இருந்­தா­லும் பொது­மக்­க­ளி­டம் லஞ்­சம் பெற்­றுள்­ள­னர். மூத்த அதி­காரி ஒரு­வர் நூறு கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்­தி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

லஞ்­சப் புகார்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மா­னதை அடுத்து, ஒரே சம­யத்­தில் 15 அதி­கா­ரி­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட 68 இடங்­களில் சோதனை நடத்­தப்­பட்­டது.

கர்­நா­டக மாநில பொதுப்­பணித்­து­றை­யில் பணி­யாற்றி வரும் இள­நிலை செயற்­பொ­றி­யா­ள­ரான சாந்த கவுடா வீட்­டில் நடந்த சோத­னை­யின்­போது ஏரா­ள­மான நகை­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. எனி­னும் ரொக்­கப் பணம் அதி­கம் இல்லை. இத­னால் சந்­தே­க­ம­டைந்த அதி­கா­ரி­கள் வீட்­டுக்கு வெளியே இருந்த குழாய்­களைச் சோத­னை­யிட்­ட­போது, கட்­டுக்­கட்­டாக பணம் இருப்­பது தெரி­ய­வந்­தது. அக்­குழாய்­களில் இருந்து ரூ.44 லட்­சம் ரொக்­கப் பணம் எடுக்­கப்­பட்­டது.

மற்­றோர் அதி­கா­ரி­யான சதா­சி­வா­வின் வீட்­டில் இருந்து 1.135 கிலோ தங்க நகை­களும் ரூ.8 லட்சம் ரொக்­கப் பண­மும் பறி­முதல் செய்­யப்­பட்­டன.

வேளாண்­துறை நிர்­வாக இயக்­கு­நர் ருத்­தி­ரேஷ் என்ற அதி­கா­ரி­யின் வீட்­டில் ஐந்து தங்­கக் கட்­டி­கள் உட்­பட ஏரா­ள­மான தங்க நகை­கள், ரொக்­கப் பணம், சொத்து ஆவ­ணங்­கள் இருந்­தன. இவற்­றின் மொத்த மதிப்பு நூறு கோடி ரூபாய் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவர் சொத்து சேர்த்­துள்ள வேகம் லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யி­னரை மலைத்­துப்­போக வைத்­தது.

15 அதி­கா­ரி­கள் மீதும் வழக்­குப்­பதிவு செய்­யப்­பட்டு, அடுத்­த ­கட்ட நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும் என லஞ்ச ஒழிப்­புத்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

இந்த சோதனை நட­வ­டிக்­கை­யில் 408 அதி­கா­ரி­கள் ஈடு­பட்­ட­னர். லஞ்­சம் பெற்ற அதி­கா­ரி­க­ளின் வீடு­க­ளுக்கு அதி­கா­லை­யில் சென்று தூங்­கிக் கொண்­டி­ருந்­த­வர்­களை எழுப்பி சோதனை நடத்­தி­ய­தாக லஞ்ச ஒழிப்­புத்­துறை தெரி­வித்­துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!