அகர்தலா: திரிபுரா உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது பாஜகவினர் தங்கள் வேட்பாளர்களை மிரட்டியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின
வாக்குச்சாவடிகளுக்கு பாஜகவினர் இருசக்கர வாகனங்களில் வந்ததாகவும் சில இடங்களில் வாக்காளர்களை வாக்களிக்கவிடவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன.
திரிபுராவில் நேற்று உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது அடையாளம் தெரியாத பலர் தலைக்கவசம், முகக்கவசம் அணிந்துகொண்டு, வீடு வீடாகச் சென்று எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என மிரட்டல் விடுத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாடி உள்ளது.

