'குஜராத்தில் தொற்று மரணம் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது'

'குஜராத்தில் தொற்று மரணம் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது'

1 mins read
aab9f8d2-08fc-4de8-89bc-349124e714f2
-

புது­டெல்லி: கொரோனா தொற்­றுக் காலத்­தின்­போது மருத்­து­வ­மனை­யில் படுக்­கை­யும் செயற்கை சுவாச வச­தி­யும் கிடைக்­க­வில்லை என குஜ­ராத் மக்­கள் குற்­றம்­சாட்டு­வதாக காங்­கி­ரஸ் எம்பி ராகுல் காந்தி தெரி­வித்­துள்­ளார்.

ஆனால் மத்­திய அரசோ உண்மைக்கு நேர்­மா­றாக நாட்டி­லேயே மிகச்­சி­றந்த மாநி­ல­மாக குஜ­ராத்தை சுட்­டிக்­காட்­டு­வ­தாக அவர் சாடி உள்­ளார்.

குஜ­ராத்­தில் கொரோ­னா­வால் 10 ஆயி­ரம் பேர் மட்­டுமே இறந்­த­தாக அம்­மா­நில அரசு கூறு­வது பொய் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், அம்­மா­நி­லத்­தில் முந்­நூ­றா­யி­ரம் பேர் தொற்­றுப் பாதிப்­பால் இறந்­துள்­ள­னர் என்­ப­து­தான் உண்மை என்று கூறி­யுள்­ளார்.

இதை நிரூ­பிக்க காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் அங்கு வீடு வீடா­கச் சென்று கணக்­கெ­டுத்து வரு­வ­தா­க­வும் விரைவில் உண்மை நிலவரம் தெரியவரும் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.