இந்தியாவில் வறுமை குறைந்த மாநிலம் கேரளா, அதிகமான மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மாநிலம் பீகார். இந்தியாவின் நிதி ஆயோக்கின் ‘வறுமை குறியீடு’ அறிக்கை இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. நாட்டில் கல்வி, சுகாதாரம், அன்றாட வாழ்க்கை நிலை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் நிலவும் வறுமை தொடர்பாக இந்தியாவின் ஆய்வுக் கழகமான, நிதி ஆயோக் ஆய்வு செய்து தனது முதல் அறிக்கையை (பல பரிமாண வறுமை குறியீடு) வெளியிட்டுள்ளது.
பீகாரில் 51.91% மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். ஜார்கண்ட்டில் 42.16% உத்தரப்பிரதேசத்தில் 37.19% மத்திய பிரதேசத்தில் 36.65% மேகாலயாவில் 32.67% வறுமையில் உள்ளனர். இந்த மாநிலங்களில் மாநில பொருளாதார வளர்ச்சியும் வருவாயும் மிகமிகக் குறைவாக உள்ளன. அதேபோல், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களிலும் பீகார் முதலிடத்தில் உள்ளது. ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன.
தாய்மார்களின் ஆரோக்கியம் பள்ளிப்படிப்பு, பள்ளி வருகை, சமையல் எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாடு ஆகியவற்றிலும் பிகார் மோசமான இடத்தை பிடித்துள்ளது.
கேரளா, கோவா, தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் வறுமை கோட்டுக்குகீழ் வாழ்பவர்கள் 6 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர். கேரளா 0.71%, கோவா 3.76%, சிக்கிம் 3.82%, தமிழகம் 4.89% பஞ்சாபில் 5.59% மக்கள் வறுமையில் உள்ளனர்.
யூனியன் பிரதேசங்கள் பொறுத்த வரையில், தத்ரா, நாகர் ஹவேலியில் 27.36 விழுக்காட்டினரும், ஜம்மு காஷ்மீர், லடாக்கில் 12.58 விழுக்காட்டினரும், டாமர் & டியூவில் 6.82 விழுக்காட்டினரும், சண்டிகரில் 5.97 விழுக்காட்டினரும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர்.
புதுச்சேரியில் 1.72%, லட்சத்தீவில் 1.82%, அந்தமான், நிக்கோபார் தீவில் 4.30%, டில்லியில் 4.79% மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் முறையை தற்போது இந்திய நிதி ஆயோக் அமைப்பு பின்பற்றி இந்த விவரங்களை திரட்டி உள்ளது.
ஒரு மாநிலத்தின் சுகாதாரத்துறை வளர்ச்சி, கல்வித் துறை மேம்பாடு, மக்களின் வாழ்வாதாரம், மக்களின் ஊட்டச்சத்து, சிறுவர் மற்றும் பதின் பருவத்தினர் இறப்பு விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
வறுமை குறைந்த மாநிலம் கேரளா
26 Nov 2021 23:16

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டலில் இலங்கையைச் சேர்ந்த ஈஷான் தாரக கூட்டகே, 30, தன் மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் எஃப்1 பந்தய போட்டிக்காக 'மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்' தயார் நிலையில் இருக்கிறது.

உடல் கட்டோடு 59 வயதில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அருண் ரொசியா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜி20 உச்சநிலை மாநாடு: பிரதமர் லீ புதுடெல்லி பயணம்

இசைக் கலைஞர் சுபாஷ் நாயருக்கு ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை

அதிபர் தேர்தல் நாளன்று வீடு புகுந்து திருடிய ஆடவர் கைது.

சமுதாயத்தில் தடம் பதித்த கோ சாரங்கபாணி, வி.டி. அரசு போன்ற தலைவர்கள் குறித்து திரு தர்மனின் கருத்து.

புதிய அதிபர் தர்மன் சண்முகரத்னம் தமிழ் முரசுடன் கலந்துரையாடல்.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!