மக்கள் புறக்கணிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
புதுடெல்லி: இந்தியாவில் அரசியல் கட்சிகள் நடத்தும் குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் ேநற்று அரசியல் சாசன தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது. பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பே ஒன்றுபடுத்துகிறது. நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்டவிதிகளின் தொகுப்பு மட்டுமல்ல, பெரும் பாரம்பரியமும்கூட. எதிர்காலத் தலைமுறையினர் நமது அரசியலமைப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
"இந்த நாள்தான் எதிரிகள் இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய துக்க நாள். 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்கு
தலின்போது உயிர்த்தியாகம் செய்த பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
"நாட்டில் பல கட்சிகள் குடும்ப அரசியல் செய்கின்றன. குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. குடும்ப அரசியல் செய்ய நினைப்
பவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம்.
"அரசியல் கட்சிகள் அரசியலமைப்புச் சட்டங்களைப் புரிந்து செயல்பட வேண்டும். ஊழலுக்காகத் தண்டனை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது.
"ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்," என்று மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.