உத்தரப் பிரதேசமும் பீகாரும் நாட்டின் ஏழை மாநிலங்கள்

உத்தரப் பிரதேசமும் பீகாரும் நாட்டின் ஏழை மாநிலங்கள்

1 mins read
0edc074f-cfb8-4ae1-bfb0-209d02fb9f0a
-

புது­டெல்லி: உத்­த­ரப் பிர­தே­சம், பீகார், ஜார்க்­கண்ட் ஆகிய மாநி­லங்­கள் இந்­தி­யா­வின் ஏழை மாநி­லங்­கள் என்று நிதி ஆயோக் அர­சாங்க அமைப்­பின் வறு­மைக் குறி­யீடு தெரி­வித்­துள்­ளது.

இந்த மூன்­றி­லும் பீகார்­தான் மிக­வும் ஏழை மாநி­லம். அங்­குள்ள மக்­களில் 51.91 விழுக்­காட்­டி­னர் வறு­மை­யில் வாடு­கின்­ற­னர். அதே­நே­ரம் ஜார்க்­கண்ட்­டில் 42.16 விழுக்­காட்­டி­ன­ரும் உத்­த­ரப் பிர­தே­சத்­தில் 37.79 விழுக்­காட்­டி­ன­ரும் வறு­மை­யில் வசிப்­ப­தா­கக் குறி­யீட்­டில் பட்­டி­ய­லி­டப்­பட்டு உள்­ளது.

நான்­கா­வது ஏழை மாநி­ல­மாக மத்­தியப் பிர­தே­சம் (36.65% வறுமை), ஐந்­தா­வ­தாக மேகா­லயா (32.67% வறுமை).

அதே­நே­ரம் தமிழ்­நாடு உள்­ளிட்ட சில மாநி­லங்­களில் வறுமை குறைந்து காணப்­ப­டு­கிறது. கேரளா (0.71%), கோவா (3.76%), சிக்­கிம் (3.82%), தமிழ்­நாடு (4.89%) மற்­றும் பஞ்­சாப் (5.59%) என வறுமை குறைந்த மாநி­லங்­க­ளா­கப் பட்­டி­ய­லி­டப்­பட்டு உள்­ளன.

ஆக்ஸ்­ஃபர்ட் வறுமை மற்­றும் மனித மேம்­பாட்டு நட­வ­டிக்கை, ஐக்­கிய நாடு அமைப்­பின் மேம்­பாட்­டுத் திட்­டம் ஆகி­ய­வற்­றால் உரு­வாக்­கப்­பட்ட உல­க­ள­வி­லான அள­வீ­டு­க­ளின் அடிப்­ப­டை­யில் மாநி­லங்­க­ளின் வறுமை நில­வ­ரம் கணக்­கி­டப்­பட்டு உள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.