80% பெண்களிடம் வங்கிக் கணக்கு

80% பெண்களிடம் வங்கிக் கணக்கு

1 mins read
c8329dfb-0309-4bf4-a79e-765aa4ba49ac
-

புது­டெல்லி: தேசிய குடும்ப சுகா­தார ஆய்வு முடி­வு­க­ளின் ஐந்­தா­வது அறிக்கை வெளி­யி­டப்­பட்டு உள்­ளது.

கடந்த ஐந்­தாண்டுகளில் இந்­தி­யா­வில் உள்ள பெண்­கள் அதி­க­மான அள­வில் வங்­கிக் கணக்­குத் திறந்­தி­ருப்­ப­தாக அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

கிட்­டத்­தட்ட 80 விழுக்­காட்­டுப் பெண்­கள் தங்­க­ளுக்­கென வங்­கிக் கணக்கு வைத்­துள்­ள­னர். இது 2015-16ஆம் ஆண்­டில் 53 விழுக்­கா­டாக இருந்­தது.

பெண்­க­ளின் சமூக, பொரு­ளி­யல் அந்­தஸ்து, குடும்­பத்­தில் முடி­வெ­டுக்­கும் அதி­கா­ரம் போன்­றவை குறித்து ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. நிலம் அல்­லது வீட்­டுக்­குச் சொந்­தக்­கா­ரர்­க­ளாக பெண்­கள் இருப்­ப­தும் கணக்­கில் எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.

கைபேசி வைத்­துக்­கொள்­ளும் பெண்­க­ள் அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் ஆய்­வ­றிக்கை கூறு­கிறது. ஐந்­தாண்­டு­க­ளுக்கு முன்­னர் 45.9% பெண்­க­ளி­டம் கைபேசி இருந்­தது. தற்­போது அது 54% ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இருப்­பி­னும் ஹரி­யானா, சண்­டி­கர் மாநி­லங்­களில் பெண்­க­ள் கைபேசி வைத்­தி­ருக்கும் விகிதம் சற்று குறைந்­து­விட்­டது.