விவசாயிகளின் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு

விவசாயிகளின் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு

1 mins read
764783b7-ab8e-4a5e-8d6e-6d8bd7f8b96f
நேற்று முன்தினம் டெல்லி மாநில எல்லையில் ஏராளமான பெண்களும் கூடினர். அவர்களில் பெரும்பாலானோர் மஞ்சள் நிற ஆடையை அணிந்து வந்தனர்.படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: புதிய வேளாண் சட்­டங்­களை எதிர்த்து விவ­சா­யி­கள் போராட்­டம் நடத்­தத் தொடங்கி ஓராண்டு நிறை­வ­டைந்­துள்­ளது.

இதை­ய­டுத்து, போராட்­டம் தொடங்­கப்­பட்ட டெல்லி மாநில எல்­லை­யில் ஆயி­ரக்­க­ணக்­கான விவ­சா­யி­கள் நேற்று முன்தினம் ஒன்­று­கூடி, இனிப்­பு­கள் விநி­யோ­கித்து தங்­கள் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தி­னர்.

உத்­த­ரப் பிர­தே­சம், ராஜஸ்­தான், பஞ்­சாப் உள்­ளிட்ட பல்­வேறு மாநி­லங்­களில் இருந்த ஏராளமான பெண்கள் உட்பட சுமார் ஐம்­ப­தா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட விவ­சா­யி­கள் நேற்று டெல்லி அருகே உள்ள காஜி­பூர் எல்­லைப் பகுதி­யில் கூடி­ய­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அச்­ச­ம­யம் பஞ்­சாபி மொழிப் பாடல்­களை ஒலிக்­கச் செய்து அவர்­கள் ஆடிப்­பாடி மகிழ்ந்­த­தா­கத் தெரி­கிறது.

இந்­நி­லை­யில், நாளை முன்பே அறி­வித்­த­படி, நாடா­ளு­மன்­றத்தை நோக்கி விவ­சா­யி­கள் பேர­ணி­யா­கச் செல்­வர் என்று விவ­சா­யி­கள் சங்க கூட்­ட­மைப்­புத் தலை­வர் ராகேஷ் திகா­யத் தெரி­வித்­துள்­ளார்.