லக்னோ: பிரதமர் மோடியின் நண்பர்களாக உள்ள பெரும் தொழிலதிபர்கள் தினந்தோறும் பத்தாயிரம் கோடி ரூபாய் சம்பாதிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழை மக்கள் நாள்தோறும் 27 ரூபாய் மட்டுமே சம்பாதிப்பதாகக் குறிப்பிட்டார்.
மத்திய அரசு ஏழை மக்களுக்காக ஏதும் செய்யவில்லை என்று பிரியங்கா சாடினார்.
"பிரதமர் மோடி பயன்படுத்தும் விமானத்தின் விலை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? ரூ.8 ஆயிரம் கோடி. அதில்தான் அவர் இங்கு வந்து உங்களிடம் பேசிச் செல்கிறார். ஆனால் உங்களின் வருமானம் உயரவில்லை.
"எட்டாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தில் பறக்கும் பிரதமர் மோடியால் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியவில்லை," என்றார் பிரியங்கா.