‘ஓமிக்ரான்’ குறித்து கவனம் தேவை: மோடி எச்சரிக்கை

புது­டெல்லி: உரு­மா­றிய கொரோனா வகை­யான 'ஓமிக்­ரான்' குறித்து மக்­கள் விழிப்­பு­டன் இருக்க வேண்­டும் என பிர­த­மர் மோடி (படம்) வலி­யு­றுத்தி உள்­ளார்.

இந்­தத் தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பாக மாநில அர­சு­கள் அனைத்து நட­வ­டிக்­கை­களை­யும் மேற்­கொள்ள வேண்­டும் என அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

'ஓமிக்­ரான்' என்று குறிப்­பி­டப்­படும் உரு­மா­றிய கொரோ­னா­வால் உல­க­ள­வில் பெரிய பாதிப்­பு­கள் ஏற்­ப­டக்­கூ­டும் என்று சில நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், தீவிர கட்­டுப்­பா­டு­கள், கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை மாநில அர­சு­கள் தொடர வேண்­டும் என்­றும் முகக்­க­வ­சம் அணி­தல், சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டித்­தல் போன்ற முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மக்­கள் பின்­பற்ற வேண்­டும் என்­றும் பிர­த­மர் மோடி அறி­வு­றுத்தி உள்­ளார்.

நேற்று முன்­தி­னம் கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் தொடர்­பான பொது சுகா­தார தயார் நிலை, தடுப்­பூசி நட­வ­டிக்கை குறித்து மதிப்­பாய்­வுக் கூட்­டம் நடை­பெற்­றது. இதற்கு தலை­மை­யேற்ற பிர­த­மர் மோடி, 'ஓமிக்­ரான்' குறித்­தும் அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­கள் பற்­றி­யும் அதி­கா­ரி­க­ளி­டம் கேட்­ட­றிந்­தார்.

இந்­தி­யா­வில் 'ஓமிக்­ரான்' தொற்று பர­வும் பட்­சத்­தில், அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கங்­கள் குறித்து மதிப்­பாய்­வுக் கூட்­டத்­தில் விவா­திக்­கப்­பட்­ட­தாக பிர­த­மர் அலு­வ­ல­கம் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­துள்­ளது.

தற்­போது வெளி­வ­ரும் ஆதா­ரங்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு அனைத்­து­ல­கப் பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வ­தற்­கான திட்­டங்­கள் குறித்து மறு ஆய்வு செய்­யப்­பட வேண்­டும் என்று அறி­வு­றுத்­திய பிர­த­மர், இந்­தி­யா­வுக்கு வரும் அனைத்து பய­ணி­க­ளை­யும் கண்­கா­ணித்­தல், மருத்­து­வப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­தல் உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்­றார்.

இதற்­கி­டையே, உரு­மா­றிய கொரோனா வகை­யான 'ஓமிக்­ரான்' பாதிப்­பால் இந்­தி­யா­வில் மூன்­றா­வது அலை ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புள்­ள­தாக தேசிய தடுப்­பூசி திட்­டத்­தின் ஆலோ­ச­க­ரும், மருத்­துவ நிபு­ண­ரு­மான டாக்­டர் நரேஷ் புரோ­கித் கூறி­யுள்­ளார்.

நாட்­டில் உள்ள சில மாநி­லங்­களில் நிலைமை மோச­ம­டைக்­கூ­டும் என்று அவர் எச்­ச­ரித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், 'ஓமிக்­ரான்' பாதிப்பு குறித்து பொது­மக்­கள் அச்­சம் கொள்­ளத் தேவை­யில்லை என்று இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கை­களை வேகப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் அனை­வ­ரும் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டால் தொற்று ஆபத்து வெகு­வா­கக் குறை­யும் என்­றும் அம்­மன்­றம் கூறி­யுள்­ளது.

இதற்­கி­டையே, அனைத்து மாநி­லங்­களும் கொரோனா பரிசோதனையைத் தீவி­ரப்­படுத்­து­வ­து­டன், கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­க­ளை­யும் மேம்­ப­டுத்த வேண்­டும் என மத்­திய அரசு கூறி­யுள்­ளது.

தேவைப்­பட்­டால் தனி­மைப்­ப­டுத்­து­வற்­கான பகு­தி­களை உரு­வாக்க வேண்­டும் என்று அனைத்து மாநில தலை­மைச் செய­லா­ளர்­க­ளுக்­கும் மத்­திய சுகா­தார அமைச்­சின் செய­லர் ராஜேஷ் பூஷன் எழு­திய கடி­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

'ஓமிக்ரான்' பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

தேசிய தடுப்பூசித் திட்ட ஆலோசகர்: மூன்றாவது அலை ஏற்படும் வாய்ப்புண்டு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!