ஏர்செல், மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்திக்கு ‘சம்மன்’

புது­டெல்லி: ஏர்­செல், மேக்­சிஸ் முறை­கேடு வழக்­கில் முன்­னாள் மத்­திய நிதி அமைச்­சர் ப.சிதம்­ப­ரம், அவ­ரது மகன் கார்த்தி சிதம்­ப­ரம் ஆகிய இரு­வ­ருக்­கும் டெல்லி உயர் நீதி­மன்­றம் அழைப்பாணை பிறப்­பித்­துள்­ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு மேக்­சிஸ் நிறு­வ­னத்­தின் துணை நிறு­வ­னம் ஒன்று, ஏர்­செல் நிறு­வ­னத்­தில் ரூ.3,500 கோடி முத­லீடு செய்­தது. இதில் பல்­வேறு விதி­மீ­றல்­கள் உள்­ள­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது.

இந்த முறை­கேட்­டில் அப்­போ­தைய மத்­திய நிதி­ய­மைச்­சர் சிதம்­ப­ரத்­துக்­கும் அவ­ரது மகன் கார்த்தி சிதம்­ப­ரத்­துக்­கும் தொடர்­புள்­ள­தாக எதிர்க்­கட்­சி­கள் குற்­றம்­சாட்­டின.

இது­கு­றித்து வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை மேற்­கொண்ட மத்­திய அம­லாக்­கத்­து­றை­யும் சிபி­ஐ­யும் இப்­போது டெல்லி உயர் நீதி­மன்­றத்­தில் குற்­றப்­பத்­தி­ரி­கையைத் தாக்­கல் செய்­துள்­ளன. இதை­ய­டுத்து இவ்­வ­ழக்­கில் குற்­றம்­சாட்­டப்­பட்ட ப.சிதம்­ப­ரம், கார்த்தி சிதம்­ப­ரம் உள்­ளிட்­டோ­ருக்கு உயர் நீதி­மன்­றம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.

இவ்வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அவை குறித்து சிபிஐ விசாரித்து வருவதாகவும் மத்திய விசாரணை அமைப்புகளின் வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!