மும்பை: உயிரிழந்த விவசாயிகளுக்காக இரங்கல் பேரணி

மும்பை: உயிரிழந்த விவசாயிகளுக்காக இரங்கல் பேரணி

1 mins read
30611ecf-d1bb-4d09-b8a8-2b623a55d0b0
-

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களின் போது நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இறந்துபோன விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மும்பையில் நேற்று இரங்கல் பேரணி நடைபெற்றது. இதில் விவசாய சங்கங்களின் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் பலர் பங்கேற்றனர். இதற்கிடையே, வேளாண் கழிவுகளை எரிப்பது குற்றமல்ல என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். படம்: ஏஎஃப்பி