பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒரே நாளில் தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒரே நாளில் தீர்ப்பு

1 mins read
cbae0ba0-af1b-4df2-868a-3d18d50f28c8
-

பாட்னா: பாலி­யல் வன்­கொ­டுமை வழக்­கில் 14 வய­துச் சிறு­வனை குற்­ற­வாளி என அறி­வித்­துள்­ளது பீகார் சிறார் சிறப்பு நீதி­மன்­றம்.

சிறுவனுக்கு மூன்றாண்டு சிறைத்­தண்­டனை விதித்த நீதி­பதி, அவனை சீர்­தி­ருத்­தப் பள்­ளிக்கு அனுப்ப உத்­த­ர­விட்­டார்.

பீகார் மாநி­லம், அரா­ரியா மாவட்ட கிரா­மத்­தைச் சேர்ந்த 14 வய­துச் சிறு­வன் கடந்த அக்­டோ­பர் 8ஆம் தேதி ஒரு சிறு­மியைப் பாலி­யல் வன்­கொடுமைக்கு உட்­படுத்­தி­ய­தா­கப் புகார் எழுந்தது.

இது­கு­றித்து விசா­ரணை நடத்­திய போலி­சார் சிறு­வ­னைக் கைது செய்­த­னர். பின்னர் நாளந்தா­வில் உள்ள சிறார் சிறப்பு நீதி­மன்­றத்­தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இந்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது.

அப்­போது காவல்­துறை தரப்­பில் முன்வைக்கப்பட்ட ஆதா­ரங்­க­ளின் அடிப்­ப­டை­யில் சிறு­வன் மீதான குற்­றச்­சாட்டு சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­பிக்­கப்­பட்­ட­தாக நீதி­பதி தெரி­வித்­தார்.

இதை­ய­டுத்து சிறு­வ­னுக்கு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று இந்த வழக்கு ஒரே நாளில் முடித்து வைக்­கப்­பட்­டது.

இந்­தி­யா­வில் எந்­தப் பாலி­யல் வழக்­கி­லும் இவ்­வாறு ஒரே நாளில் தீர்ப்பு வழங்­கப்­பட்­ட­தில்லை.