அனைத்துலகப் பயணிகள் விமானச் சேவை குறித்து இந்திய அரசு மறுபரிசீலனை எய்ம்ஸ்: தடுப்பூசியை எதிர்க்கும் திறன் கொண்டது ‘ஓமிக்ரான்’

புது­டெல்லி: 'ஓமிக்­ரான்' அச்­சு­றுத்­தல் கார­ண­மாக அனைத்­து­ல­கப் பய­ணி­கள் விமா­னச் சேவை­யைத் தொடங்­கு­வது குறித்து இந்­திய அரசு மறு­ப­ரி­சீ­லனை செய்ய உள்ளது.

முன்­ன­தாக டிசம்­பர் 15ஆம் தேதி முதல் அனைத்­து­லக விமா­னச் சேவை­யைத் தொடங்க இருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்டு இருந்­தது.

எனி­னும், 'ஓமிக்­ரான்' பாதிப்பு குறித்து பல்­வேறு தக­வல்­கள் வெளி­யான வண்­ணம் உள்­ளன. இத­னால் மத்­திய அரசு பல்­வேறு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடிவு செய்­துள்­ளது.

இதன் எதி­ரொ­லி­யாக அனைத்து­லகப் பய­ணி­கள் விமா­னச் சேவை­யைத் தொடங்­கு­வது சற்றே ஒத்­தி ­வைக்­கப்­ப­ட­லாம் எனத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

"அனைத்­து­லக விமா­னச் சேவை­யைத் தொடங்­கும் முடிவு மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­ப­டு­கிறது. பிர­த­மர் மோடி­யின் உத்­த­ர­வின்­பே­ரில் மத்­திய சுகா­தா­ரத் துறை, விமா­னப் போக்­கு­வ­ரத்து அதி­கா­ரி­க­ளு­டன் கலந்து ஆலோ­சனை நடத்­திய பின்­னர் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது," என மத்­திய உள்­துறை அமைச்சு கூறி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில் இது­வரை 'ஓமிக்­ரான்' பாதிப்பு கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என சுகா­தார அமைச்சு வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

எனி­னும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக மகா­ராஷ்­டிரா, கர்­நா­ட­கா­வில் கண்­ட­றி­யப்­பட்ட இரண்டு தொற்­றுத்­தி­ரள்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர் என்­றும் அந்த அமைச்சு கூறி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், கேர­ளா­வுக்கு வரும் அனைத்து வெளி­நாட்­டுப் பய­ணி­களும் ஒரு வாரத்­துக்கு கட்­டா­ய­மாகத் தனி­மைப்­ப­டுத்­தப்­படு­வர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கர்­நா­ட­கா­வில் 'ஓமிக்­ரான்' பாதிப்பு இல்லை என அம்­மா­நில முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை தெரி­வித்­துள்­ளார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் 'ஓமிக்­ரான்' பாதிப்பைத் தடுப்­ப­தற்கு மத்­திய அர­சின் அறி­வு­றுத்­த­லுக்­காக காத்­தி­ருக்­கா­மல் அதி­கா­ரி­கள் உட­ன­டி­யாக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளவேண்­டும் என அம்­மா­நில முதல்­வர் உத்­தவ் தாக்­கரே உத்­த­ர­விட்­டுள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது. இதே போல் மேலும் பல மாநி­லங்­கள் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளன.

புதுடெல்லி: 'ஓமிக்ரான்' என்று குறிப்பிடப்படும் உருமாறிய கொரோனா வகை தடுப்பூசியை எதிர்க்கும் திறன் கொண்டது என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாவது அலை குறித்து இப்போதே விவாதிக்கத் தேவை இல்லை என்றும் இந்தியாவில் அதற்கான அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அண்மைய உருமாறிய கொரோனா வகையானது மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியிலிருந்து தப்பிக்கும் திறன் கொண்டது. இதற்கேற்ப அக்கிருமியின் புரதத்தில் முப்பது உருமாற்றங்கள் நடந்துள்ளன. எனவே இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ தயாரிக்கப்பட்ட தடுப்பூசியின் செயல்திறனை மறுமதிப்பீடு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது," என்று ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

மறுமதிப்பீட்டுக்குப் பின்னர் கிடைக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே எதிர்கால செயல்பாடுகளை தீர்மானிக்க இயலும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அண்மைக்காலமாக இந்தியாவில் பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சரியாகப் பின்பற்றுவதில்லை என்றும் ஒருவிதமான கவனக்குறைவு தெரிகிறது என்றும் கூறி உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!