ஆறு ஆண்டுகளில் 700,000 புதிய நிறுவனங்கள்

ஆறு ஆண்டுகளில் 700,000 புதிய நிறுவனங்கள்

1 mins read
ee1d94b4-590e-468a-971b-cbcae4770aac
-

புதுடெல்லி: கடந்த ஆறு ஆண்டு­களில் மட்­டும் நாட்­டில் ஐநூ­றா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் மூடப்­பட்­டுள்­ள­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

எனி­னும் இதே கால­கட்­டத்­தில் எழு­நூ­றா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட புதிய நிறு­வ­னங்­கள் தொடங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் மத்­திய பெரு­நி­று­வன விவ­கா­ரங்­கள் துறைக்­கான இணை அமைச்­சர் ராவ் இந்­தர்­ஜித் சிங் கூறி­யுள்­ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்­ரல் 1 முதல் தற்­போது வரை நாடு முழு­வ­தும் 5,00,506 நிறு­வ­னங்­கள் மூடப்­பட்­டன என்­றும் 7,17,049 புதிய நிறு­வ­னங்­கள் நாட்­டில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன என்­றும் ராவ் இந்­தர்­ஜித் சிங் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், நடப்பு நிதி­யாண்­டில் கடந்த ஏப்­ரல் முதல் இது­வரை 22,557 நிறு­வ­னங்­கள் மூடப்­பட்­டுள்­ள­தா­க­வும் இதே கால­கட்­டத்­தில் 1,09,098 புதிய நிறு­வ­னங்­கள் தொடங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் மத்திய அமைச்­சர் அளித்த பதி­லில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்­கைக்­குப் பிறகு நாடு முழு­வ­தும் ஏரா­ள­மான நிறு­வ­னங்­கள் மூடப்­பட்­ட­தாக ஊட­கங்­களில் செய்தி வெளி­யா­னது. இதை­ய­டுத்து மாநில வாரி­யாக மூடப்­பட்ட நிறு­வ­னங்­கள் தொடர்­பாக மக்­க­ள­வை­யில் கேள்வி எழுப்­பப்­பட்­ட­து.

இந்­நி­லை­யில், கடந்த நிதி­யாண்­டில் மட்­டும் 155,377 புதிய நிறு­வ­னங்­கள் பதிவு செய்­யப்­பட்­ட­தா­க­வும் 2019-20இல் இந்த எண்­ணிக்கை 122,721ஆக இருந்­தது என்­றும் இணை அமைச்­சர் ராவ் இந்­தர்­ஜித் சிங் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், 2016-17இல் 97,840 நிறு­வ­னங்­களும் 2017-18-இல் 108,075 நிறு­வ­னங்­களும், 2018-19இல் 1,23,938 நிறு­வ­னங்­களும் புதி­தா­கத் தொடங்­கப்­பட்­டன என்று அமைச்­ச­ரின் பதி­லில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த 6 ஆண்­டு­களில் 2017-18ஆம் நிதி­யாண்­டில் அதிக அள­வாக 2,36,262 நிறு­வ­னங்­களும் 2018-19இல் 1,43,233 நிறு­வ­னங்­களும் மூடப்­பட்­டுள்­ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.